tag:blogger.com,1999:blog-6166954.post109535993735445013..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: பணம்... பற்று... இடர்...Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6166954.post-1095385913316040782004-09-16T18:51:00.000-07:002004-09-16T18:51:00.000-07:00பணத்தை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம...பணத்தை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம் அதிகமாகும். அப்படி அச்சிடும் பணம் முழுவதும் நீண்டகால கேபிடல் முதலீடாக இருக்கும் பட்சத்திலும், அந்த "பொய்ப்" பணம் உண்மைப் பணமாக மாற்றக்கூடியதான (அதாவது அந்த முதலீட்டின் மூலம் உண்மையான மதிப்பு எப்படியாவது உயரும்) வகையிலும் தான் அதிகமாக அச்சடிக்கும் பணம் உபயோகமானது. அதுவும் கூட வளர்ச்சி தேங்கும்போது (recession) மட்டுமே பயன்படுத்த வேண்டிய முறை. <br /><br />நான் இப்பொழுது வட்டி விகிதத்தைக் குறைத்தது பற்றி சொல்லியதில் 6%->3.5% என்பது வங்கிகள் CRR பணத்தை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு. Prime Lending Rate (PLR) மாற்றப்படவில்லை.<br /><br />ஆலன் கிரீன்ஸ்பான் அவ்வப்போது மாற்றுவார் மாற்றுவார் என்று உங்களூரில் காத்துக்கொண்டிருப்பது இந்த PLRதான்.<br /><br />இந்தியாவில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் மக்கள் உடனே பங்குச்சந்தைக்குப் போய்விட மாட்டார்கள். பங்குச்சந்தை பற்றிய பாலபாடம் பலருக்குத் தெரியாது. சிலர் சாகும் வரை பங்குச்சந்தை பக்கம் போகப்போவதுமில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com