tag:blogger.com,1999:blog-6166954.post114605753958769420..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Drunkards' DivorceBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6166954.post-1146400965140926242006-04-30T05:42:00.000-07:002006-04-30T05:42:00.000-07:00"... (பிற்காலத்தில்) மடையர்கள் மக்களுக்குத் தலைவர்..."... (பிற்காலத்தில்) <B>மடையர்கள் மக்களுக்குத் தலைவர்களாவர்</B>. (மார்க்கத்தின் அடிப்படை) அறிவின்றி தம் மனம்போன போக்கில் தீர்ப்பு வழங்கி, தாமும் வழிகெட்டு மக்களையும் வழி கெடுப்பர்" என்பது அண்ணலாரின் எச்சரிக்கை [இமாம் புகாரீ அவர்களின் 6763ஆவது மற்றும் இமாம் முஸ்லிம் அவர்களின் 4829ஆவது பதிவுகள்].வஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146340592859675912006-04-29T12:56:00.000-07:002006-04-29T12:56:00.000-07:00அன்பின் பாலா,தங்களுடைய பதிவுகளை அவ்வப்போது படித்து...அன்பின் பாலா,<BR/><BR/>தங்களுடைய பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். ஓராண்டுக்கு முன்னர் நீங்கள் தலாக் குறித்து இட்ட பதிவும் அதற்கு அபூ முஹை அவர்களின் விளக்கமும் நினைவிலிருக்கிறது.<BR/><BR/>தங்களின் இப்பதிவில் மூன்று சொற்கள் மிக முக்கியமானவை. அம்மூன்றில், இரண்டு சொற்கள் மிக, மிக முக்கியமானவை:<BR/>\\சன்னி முஸ்லீம்களை தொண்ணூறு சதவீதம் கொண்ட கண்டபானியா (Kantabania)வில் மொத்தமாக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான உள்ளூர் ஜமாத் (Choudah Mohalla Muslim Jamat) பிரமுகர் பல்லூ சர்தார், அலி-நஜ்மாவின் வீட்டிற்கு சென்று கைகலப்புக்குப் பிறகு இருவரையும் மீண்டும் பிரித்துவைக்கிறார். ஜமாத்தின் தலைவர் ஷேக் அப்துல் பாரி, தாம்நகருக்கு சென்று வேறொரு மார்க்க அறிஞரான முஃப்தி ஷேக் க்வாஸிமை அணுகி 'குடிபோதையில் உளறினாலும் முத்தலாக் செல்லுபடியாகும்' என்று <B>தீர்ப்பு</B> <B><I>வாங்கி வருகிறார்</I></B>\\.<BR/><BR/>உண்மை தேடுபவராக உங்களைக் காண்பதால் உங்களுக்கு ஒரு செய்தி:<BR/>'ஃபத்வா' என்று சொல்லப் படும் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புக்கு தலையாய ஒரு நிபந்தனையுண்டு. ஒரு ஃபத்வா வெளியிடப் படுமானால் அதன் அடிப்படை, இறைமறை குர்ஆன் வசனங்களிலிருந்து/இறைத் தூதரின் வழிமுறையிலிருந்து அமைந்திருக்க வேண்டும். இல்லையேல் அந்த ஃபத்வா செல்லாது.<BR/><BR/>அப்படிப் பட்ட செல்லாத ஃபத்வாக்கள்தாம் போலி முல்லாக்களால் வாங்க-விற்கப் படுகின்றன.<BR/><BR/>இப்படி நடக்கக் கூடிய 'வியாபார'த்திற்கு அவர்கள் கூறும் காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வது, 'வியாபாரி'களின் 'திறமை'யைப் புரிந்து கொள்ள ஏதுவாகும்.<BR/><BR/>மேற்காணும் செல்லாத ஃபத்வாவின் அடிப்படை இறைமறையோ தூதரின் வழிமுறையோயன்று; மாறாக, ஒரு மனிதரின் மனத்தில் உதித்த ஓர் உவமை மட்டுமே! <BR/><BR/>அதாவது, தலாக் என்பது கொடிய விஷத்துக்கு ஒப்பானதாம். எனவே, "போதையில் குடித்தாலும் தூக்கத்தில் (?) குடித்தாலும் கொடிய விஷம் உயிரைப் போக்கி விடுமன்றோ? அது போலவே, போதையிலோ தூக்கத்திலோ தலாக் கொடுத்தால் செல்லுபடியாகும்" என்பதுதான் வியாபாரிகளின் வாதம்!<BR/><BR/>சரி, அடிப்படைக்கு வருவோம்.<BR/>இறைத்தூதரின் கவித்துவமான தீர்ப்பைப் பாருங்கள்:<BR/>"லா தலாக், வலா இதாக் ஃபீ கலாக்" தமிழில்: <B>"மணவிலக்கு என்பதோ விடுதலை என்பதோ மனம் மூடிக் கொள்ளும் போதன்று"</B> [இமாம் அபூ தாவூத் அவர்களின் 1874ஆவது பதிவு].<BR/><BR/>Ghalaq என்ற அரபுச் சொல்லை அடங்காச் சினம், போதை போன்ற 'தன் வசமிழத்தல்' அல்லது 'தன்னிலை மறத்தல்' என்று தமிழ்ப் படுத்தலாம்.<BR/><BR/>உறக்கத் தலாக் குறித்து இங்கு ஏற்கனவே அபூ முஹை தெளிவான பின்னுட்டம் இட்டுள்ளார். என்னுடையது மேல் விளக்கம் மட்டுமே.<BR/><BR/>நன்றி!வஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146228998988776102006-04-28T05:56:00.000-07:002006-04-28T05:56:00.000-07:00விளக்கங்களுக்கு நன்றி அபூ முஹை.விளக்கங்களுக்கு நன்றி அபூ முஹை.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146202851397484762006-04-27T22:40:00.000-07:002006-04-27T22:40:00.000-07:00//முதலில் மது குடித்ததற்கு தண்டனை ஒன்றும் இல்லையா?...//முதலில் மது குடித்ததற்கு தண்டனை ஒன்றும் இல்லையா?//<BR/><BR/>அன்பின் சுதர்சன்,<BR/><BR/>போதையில் இருக்கும் முஸ்லிமுக்கு தண்டனை உண்டு. தண்டனை வழங்கும் அதிகாரத்தில் ''இஸ்லாம்'' இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146202544714501132006-04-27T22:35:00.000-07:002006-04-27T22:35:00.000-07:00(தூக்கத்தில் கூறிய தலாக் சம்பந்தமாக பாமரர்களும் பு...(தூக்கத்தில் கூறிய தலாக் சம்பந்தமாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் <A HREF="http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2728&postdays=0&postorder=asc&start=0" REL="nofollow">முத்தமிழ் மன்றத்தில்</A> சிறு விளக்கமளித்துள்ளேன் அதை இங்கு உள்ளிடுகிறேன். புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும், புரியாதவர்கள் விளக்கம் கேட்கலாம்.)<BR/><BR/>இஸ்லாமிய சட்ட வழக்குகள் குறித்து எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிம் அறிஞருக்கும் தனிப்பட்டக் கருத்து இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இந்த வழக்கில் என் கருத்து முக்கியமல்ல. இவ்வழக்கு சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். <BR/><BR/>மூன்று நபர்களின் தவறுகளை இஸ்லாம் புறக்கணிக்கச் சொல்கிறது. <BR/><BR/>1. பருவமடையா சிறுவன் செய்யும் தவறு. <BR/><BR/>2. சுய நினைவில்லாத, பைத்தியக்காரன் செய்யும் தவறு. <BR/><BR/>3. தூக்கத்திருப்பவன் செய்யும் தவறு. <BR/><BR/>இம்மூவருக்கும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இவர்களின் நன்மையான செயல்களும் பதியப்படாது, தீமையான செயல்களும் பதியப்படாது என்று இஸ்லாம் கூறுகிறது. இவர்கள் எந்த செயலையும் சுயநினைவோடு செய்வதில்லை என்பதால் இவர்கள் தவறு செய்தாலும் குற்றவாளி என தண்டனை பெறுவதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்கள். <BR/><BR/>இனி விஷயத்துக்கு வருவோம். <BR/><BR/>ஒருவர் தூக்கத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாகக் காண்கிறார். திருமணத்தின் போது சொல்லப்படும் வார்த்தைகளையும் தூக்கத்தில் உளறுகிறார். மறுநாள், அவர் தூக்கத்தில் திருமணம் முடித்த பெண் இவருக்கு மனையாகி விட்டார் என்று யாராவது சொன்னால், அவரின் புத்தியில் கோளாறு இருக்கிறது என தீர்க்கமாகச் சொல்லலாம். <BR/><BR/>தலாக் என்பது விழிப்பில் சொல்ல வேண்டும் அதுதான் நிஜமாக இருக்கும். தூக்கத்தின் உளறலையெல்லாம் இஸ்லாம் ஒரு பொருட்டாகவேக் கருதுவதில்லை. <BR/><BR/>இந்த வழக்கு சம்பந்தமாக மதத்தலைர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். இது போன்ற அறிஞர்களின் அறியாமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது - அதாவது இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவன் தூக்கத்தில் ''தலாக்'' என்று சொன்னால் அது வெறும் உளறலாகத்தான் இருக்கும். மாறாக விவாகரத்து ஏற்பட்டுவிடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146124587386815032006-04-27T00:56:00.000-07:002006-04-27T00:56:00.000-07:00முதலில் மது குடித்ததற்கு தண்டனை ஒன்றும் இல்லையா?முதலில் மது குடித்ததற்கு தண்டனை ஒன்றும் இல்லையா?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146120847623724212006-04-26T23:54:00.000-07:002006-04-26T23:54:00.000-07:00குடி போதையில்; உணர்வற்ற நிலையில் சொல்லப்படும் தலாக...குடி போதையில்; உணர்வற்ற நிலையில் சொல்லப்படும் தலாக் செல்லாது என்பதும், <BR/>ஆண் தலாக்கின் மூன்று தவணைகளை ஒற்றை வாய்ப்பில் பயன்படுத்த முடியாது என்பதும்<BR/>யாரும் அறியாத ஒன்றா என்ன? <BR/><BR/>விஷயமெல்லாம், ஏதாவது குடைச்சல் கொடுக்கமுடியுமா என்று பார்க்கிற 'கிருமி'களிடம் தான். 'இஸ்லாத்தில் பெண்ணுரிமை' என்று நீட்டி முழக்க - சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் விலை போவது அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146108995515253932006-04-26T20:36:00.000-07:002006-04-26T20:36:00.000-07:00Earlier links: Koran Teachings :: Thalaaq - Abu Mu...Earlier links: <A HREF="http://abumuhai.blogspot.com/2005/05/1.html" REL="nofollow">Koran Teachings :: Thalaaq - Abu Muhai</A><BR/><BR/><A HREF="http://etamil.blogspot.com/2005/05/blog-post.html" REL="nofollow">முஸ்லிம் திருமண விவாகரத்துக்கு புதிய கட்டுப்பாடு</A>Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146071812760664082006-04-26T10:16:00.000-07:002006-04-26T10:16:00.000-07:00"உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து, ஏப்ரல் 18, 2005 வழ..."உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து, ஏப்ரல் 18, 2005 வழக்கை தள்ளுபடி செய்கிறது...."// <BR/><BR/><BR/>'என்னைக்கும் இல்லைங்கிற மகராசிதான் இன்னைக்கும் இல்லைன்னுட்டா; நித்தமும் போடுற ... உனக்கு அன்ன ஆச்சு இன்னைக்கி' அப்டின்னு சொன்ன பிச்சைக்காரன் கதை எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி, இஸ்லாமியரின் 'பெண் சுதந்திரம்' எல்லோரும் அறிந்ததே; ஆனால் இந்த நீதித்துறையும் எப்படி துணை போனது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1146059966480125832006-04-26T06:59:00.000-07:002006-04-26T06:59:00.000-07:00அவசியமான நல்ல பதிவு.அவசியமான நல்ல பதிவு.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com