புதன், பிப்ரவரி 11, 2004

ஒரு அரட்டையும் ஒரு பதிவும்

அம்பலம் அரட்டை - தேசிகன் பக்கம்: "
w-sujatha: டகடேசுவரன அமுத சரபியில் ரவி சப்ரமண்யம் வெ சா இரா முருகன் கட்டுரைகளை படிததீர்களா
மகுடேசுவரன்: சார். அவசியம் படிக்கிறேன். கொஞ்ச காலமாகவே அமுத சுரபி படிக்கவில்லை
w-sujatha: மகுடேசுவரன் அதில் உங்கள் கவிதைகளைப் பற்றி இராமுருகன் எழுதியள்ளார் ரவி வைரமுத்து வுக்க சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்
மகுடேசுவரன்: தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்கு சென்னை வந்திருந்தேன். அந்நிகழ்ச்சியை ஒட்டி என் கவிதைகள்குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?
மகுடேசுவரன்: சார். அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.
w-sujatha: மகுடேசுவரன் இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்
மகுடேசுவரன்: சார், தாமதமாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

shankar: i have a theory. v always blame the rulers for dishonesty and currption. but recnetly i have seen many of the public are equaly currupt and not honest in their own way from cheating taxes to govt etc. so when we will become currupt free if most of us corrupted already?? may be good law is required
w-sujatha:நிறைய பேசிவிட்டோம் அடுதத வாரம சந்திப்போம் ஷங்கர் நீங்கள்சொல்லும கருத்தினஅடிப்படையிலதான் டைரகடர் ஷங்கரின் அடுதத படமான `அன்னியன்` அமைந்திருக்கிறது எல்லோருக்கம் வணக்கம்

சிஃபி/அமுதசுரபி - தமிழ் இலக்கியம் 2004 - இரா. முருகன்: "என் கருத்து - எஸ்.பொ.வின் பாலுணர்வுத் தேடல்கள், அவருடையவை. அவற்றை வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்து கொள்வதால் என்ன நிறைவு அடைந்திருக்கிறார், அவர்? அதுவும் அவரோடு இருந்த, பெயர் குறிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிப் பெண்கள் பற்றியெல்லாம், அவர்கள் மூலம் தனக்கு பால்வினை நோய் வந்ததைப் பற்றி எல்லாம் எழுதித்தான் இருக்க வேண்டுமா? அது மெல்லிய குரூரம் இல்லையா? இந்தப் பெயர்களும் எஸ்.பொ. வுக்குப் பால்வினை நோய் வந்ததும் எப்படி வரலாற்றில், வரலாற்றோடு வாழ்வதாகும் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஞானி பேசினாலும் அவையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். பேசி முடித்து அவர் கீழே இறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு ஓர் அன்பர், அவர் காலில் விழுந்தார். ஞானியின் புன்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரிகிறது.
----
கவியரங்கில் ஏமாற்றம், மகுடேசுவரன். சுஜாதாவின் செல்லப் பிள்ளையாகக் கணையாழியில் எழுதி வளர்ந்தவர். (இலக்கியச் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றித் தோழமை அரங்கில் மாலன் குறிப்பிட்டதாக நினைவு). தான் தற்போது எழுதிவரும் "மூன்றாம் பால்" தொகுப்பில் இருந்து கவிதைகளைப் படித்தார், மகுடேசுவரன். ஊர்ப் பெயர்களாக அடுக்கி ஒரு காதல் தம்பதியின் கதையைச் சொல்லும் கவிதை ஒன்று இப்படி முடிந்தது.

இப்போது / பழனியில் அவன்
திரிகிறான் / பரதேசியாக.
வேலூரில் அவள்
இருக்கிறாள் /வேசியாக.
'Don’t send me such trash anymore’"

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு