வெள்ளி, மே 14, 2004

வலைபாயுதே...

1. மரத்தடியில் லலிதா (ராம்) மட்டும் எழுதிக் கொண்டிருந்த கர்னாடக இசை விமர்சன உலகுக்கு ஒரு புதிய வலைப்பதிவாளர் வந்திருக்கிறார். மேண்டலின் சீனிவாஸ் குறித்த பதிவோடு ஆரம்பித்திருக்கிறார் ஜெய்கணேஷ். அவரை மாதிரியே இவரும் ரொம்ப பயமுறுத்தாமல் எளிய தமிழில் இனிய கர்னாடக கச்சேரிகளை அறிமுகம் செய்வார் போலத் தெரிகிறது. யூனிகோடுக்கு மாறிடுங்களேன் சார்!?

2. நக்கல் நாகராஜன் 'மே மாத சிறப்பு கேள்வி'யாக மே பதினெட்டின் தாத்பரியத்தை விசாரித்திருந்தார். வழக்கம் போல் 'மணநாள்', பத்தாவது பிட் அடித்த நாள், முதல் முதலாக மலபார் பீடி குடித்த நாள், சதாம் வீழ்ந்த நாள் என்று ஏதாவது சொல்வார் என்று நினைத்தால், வேறொன்றை சொல்கிறார். 'சரியா/தவறா' என்று சொல்லுங்க! நான் விடைக்காக வாலியை துணைக்கழைத்துக் கொண்டேன்.

3. திருப்பதி படித்ததில் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்:

எல்லோரும் நல்லவர்கள் தான்,
சந்தர்பம் கிடைக்காமல் இருக்கும் வரை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு