செவ்வாய், மார்ச் 30, 2004

மானிடரே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

இன்னும் கொஞ்ச நாள் வலைப்பதிவுகளுக்கும் வெகஷன். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அதுவரை கொஞ்சம் கொறிக்க ஜாலி அவல் + ஸ்னேஹா!

பழைய பல்லவி


மரத்தடிக்கு மணி சுவாமிநாதன் எனப்படும் ரங்கபாஷ்யம் பங்குபெற ஆரம்பித்திருக்கிறார். முன்னுமொரு காலத்தில் ராகாகியில் அவரும் இன்னும் சிலரும் பங்குபெற்ற சில சுட்டிகள்:

ஆதியிலே அவுரங்கசீப் தமிழ் எழுத்தாளர்களில் இன்று யார் ஞானபீடம் ஏறப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பை ஆரம்பித்தார்.

அதற்கு சொக்கரின் பதில்.

வேறு ஒன்றுக்கு சி·பிராயரின் பதில்.

ஒட்டக்கூத்த ராயன்

உலகமாதா வாத்து: (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

மறக்கமுடியுமா?: O.K. ராயன்

இலேசான ரிப்போட்டர்: உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சொரூபதாஸ¤க்கு புகாரியின் பதில்

Masks and False Faces

-/இரமணிதரன்

ஜெ,பி.: ஐகாரஸ்

இரமணியின் பதில்

கவிதா மாரிமுத்து

ஓட்டப்பந்தய ராயன்: பாபா காந்தி

வேறு பல சுவையான பரிமாறல்களையும், ராகாகியில் ரங்கபாஷ்யம் என்று தேடினால் கிடைக்கும்.

ரங்கபாஷ்யமுக்கும் 'தென்றல்' மணிவண்ணனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை!

எழுதியவரை சொல்லுங்கள்



பா. ராகவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய கவிதை இது. அப்பொழுது அழ. வள்ளியப்பா அப்புசாமி குப்புசாமின்னு ஒரு தொடர் கோகுலத்துல எழுதினார். அதேமாதிரி பாரா எழுதினதை அருகில் அமர்ந்து செப்பனிட்டு எழுதியதாம். கோகுலத்திலும் வெளிவந்தது.

அழ. வள்ளியப்பாதான் எனக்கு அறிமுகமான முதல் எழுத்தாளர். குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறிப் பேசுவார். அண்ணா நகரில் அவரது வீட்டுக்கு சென்ற நாட்களும் பொழுதுகளும், அவர் எங்களைப் பார்க்க வந்திருந்த நேரங்களும் மிகவும் இனிமையானவை. நான் எழுதிய கிறுக்கல்களை முதன்முதலில் பிரசுரித்தவர். கோகுலம் இதழில் இருந்து வெளியாகும் சிறு துணுக்குகளுக்கும் சன்மானம் வருவது துள்ளிகுதிக்க வைக்கும்.

அவரை குறித்து மேலும் அறிய சந்தவசந்தம் குழுவில் நிறைய பதிவுகள் இருக்கிறது. மன்ற மையத்திலும் பேசியிருக்கிறார்கள்.

ஈஷிக்கொள்ளுதல் - மாது



"அம்மா, ஸ்கூல்ல இன்னிக்கு பரத்துன்னு ஒரு ·ப்ரெண்ட் கிடைச்சாம்மா.ரொம்ப நல்ல பையம்மா"
"அம்மா, இன்னிக்கு பரத் வீட்ல போய் ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கப் போறோம்மா"
"அம்மா, நாளைக்கு எனக்கும் சேர்த்து பரத்தே லன்ச் கொண்டு வராம்மா"
"அம்மா, இன்னிக்கு எனக்காக ராகேஷ போட்டு மொத்தி எடுத்துட்டாம்மா பரத்"
- - - - - - - - - - - - - - - -- - -
- -- - - - - - - - - - - - - -- -- -
- - - - - - - - - - - - - - -- - - -
- - - - - -- - - - - - - -- -- - -
"என்னடா கொஞ்ச நாளா பரத் பேச்சய கானோம்"
"ஒன்னுமில்லம்மா"
"ஏதோ மறைக்கிற சொல்லு...ஏன் கண்ணுல தண்ணி"
"பரத் ரொம்ப மோசம்மா, அவன் என்ன செஞ்சான் தெரியுமா....................."
"தெரியும் நீ அப்படி போய் ஈஷிண்ட போதே தெரியும். அளவா வெச்சுக்கோன்னு அப்பவே சொன்னேன் கேட்டயா"



நாம் வளர்ந்தும் சிறுவர்களாகவே இருக்கிறோம். யாராவது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, பழக்கம் நெறுக்கமாகும் போது போய் ஈஷிக்கொள்கிறோம். மற்றவர்களின் குறைகளை மறந்து விடுகிறோம். நிறைகளின் மொத்த உருவமாக மற்றவரைக் காண்கிறோம். மற்றவரும் மனிதர் என்பதை மறந்து விடுகிறோம். நமது கற்பனைகளைக் கொண்டு மற்றவரின் நிழலை உருவாக்கிக் கொள்கிறோம். நிழலுடன் உறவாடுகிறோம். வெளிச்சம் பட்டு நிழல் மறையும் போது வேதனையுறுகிறோம். இந்த விளையாட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது. பாடங்கள் கற்றுக் கொண்டோமா என்று தெரியவில்லை.

திங்கள், மார்ச் 29, 2004

என்.டி.டி.வி. கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்:

அனைத்திந்தியா
என்.டி.ஏ.287-307
பிஜேபி190-200
காங். கூட்டணி143-163
காங்.95-105
பிறர்90-100




தொகுதிகள்வெற்றிபெறக் கூடியவை2004-இன் மாற்றம்
பிஜேபிகாங்.மூன்றாவது அணிமற்றவர்கள்பிஜேபிகாங்.மூன்றாவது அணிமற்றவர்கள்
ஆந்திரா4234701-2200
அஸ்ஸாம்1447032-301
பீஹார்40261301-4400
சட்டிஸ்கர்11110003-300
குஜராத்26242004-400
ஹரியானா102620-8620
கர்நாடகா282152011-1320
கேரளா200146003-30
தமிழ் நாடு3953400-212100
முக்கிய மாநிலங்கள்5092731427717-11116-6
மற்ற மாநிலங்கள்341590100000
அனைத்திந்தியா5432881517727-11116-6


மாநிலவாரியான முழுப் பட்டியல்

ஆவியுலக அனுபவங்கள்

எனக்கு ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல வழக்கம் இருந்தது. 'வேப்பமர உச்சியில் நின்னு... பேயண்ணு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!' என்று அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான 'தூங்காதே... தம்பி தூங்காதே...' மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை எடுத்துக் கொண்டோம்.

எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம். அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும் ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை வளத்தில் 'லார்ட் ஆ·ப் திரிங்ஸை'யும், கதை வளத்தில் 'ஹாரி பாட்டரை'யும், கவர்ச்சி வளத்தில் 'பேசிக் இன்ஸ்டிங்க்ட்'டையும் மிஞ்சும் படங்கள் மூலம் நட்புகரமான பேய்களின் அறிமுகம்.

அப்படியே 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்று பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப் பேந்த விழிக்கும் மோகனின் 'பிள்ளை நிலா' அப்பொழுது வெளிவந்தது. கல்யாணமானால் வீட்டில் 'பேய்' இருக்கும் என்று சிலர் சொல்லித் தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை.

நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி உலாவி வந்தது. 'அட்மிரால்டி ஹோட்டல்' என்னும் விடுதியின் வாயிலில் உள்ள மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால் விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன் விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர் சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட் தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில் சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள். மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று. அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான். நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன் எங்களை உற்று பார்ப்பதும் 'என்ன வேணும்டா' என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக் கொண்டிருந்தான்.

ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின் கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம் சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம். இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great story-teller or a master decptionist.

வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள். முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம் நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம். சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர் கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள் சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும் விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன்.

என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது. உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக் கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும் அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ் என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம் கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த 'Defending Your Life' படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக் கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது.

அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும் விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர் முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன். (சோகத்தைத் தீர்க்க 'ஜான்' டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை கொடுக்க வந்தது தனி கதை).

சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன் தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது.

ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம் அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான் மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.

நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, 'ஆவிகளுடன் பேசுவதற்கான போர்டு' என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. 'Please grow up' என்று மனைவி சொல்ல தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

- பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்

(சில) சக்ஸஸ் சக்கரவர்த்திகள் - ரஞ்சன்

1. ஜே. ஆர். டி. டாடா
2. ·ப்ரெட் டிலூகா - சப்வே உணவகம்
3. டை வார்னர் - பீனி பேபி பொம்மைகள்
4. கெமன்ஸ் வில்லியம்ஸ் - ஹாலிடே இன் விடுதி
5. மைக்கேல் லீ சின் - அங்காடி
6. கிரெக் மெக்கா - தொலைதொடர்புத்துறை
7. சுங் ஜூ யுங் - ஹ்யுண்டாய் கார்
8. சம்மர் ரெட்ஸ்டோன் - பாரமவுண்ட்: திரை/ஊடகங்கள்
9. ஜார்ஜ் சோரஸ் - பங்குச் சந்தை முதலீட்டாளர்
10. பரல் - விளம்பரத்துறை
11. டெபி ·பீல்ட்ஸ் - லிட்டில் டெபி என்னும் கேக்-வகைகள்

நன்றி: குமுதம்.காம்

(குசும்பு) பிகு: இந்தப் பதிவிற்கும் கீழேயுள்ள பதிவிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை :P

கண்ட கண்ட பசங்கள - தேவன்

இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், எஸ்.என் சுரேந்தர்


Devanகண்ட கண்ட பசங்கள எல்லாம்
மேல ஏத்தும் கடவுளே

கெட்ட கெட்ட பசங்கள எல்லாம்
மேல ஏத்தும் கடவுளே

எங்களையும் கொஞ்சம் மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பார்த்து வச்சு லேசாத் தூக்குங்க

மேல இருக்கிறவனை இறக்க வேணாங்க
அட... எங்களப் போட்டு தரைக்குக் கீழே அமுக்க வேணாங்க

நாயரு மேயராகும் எழுத்து மாறினா
லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா

சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில
என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே

பென்ஸ் கேக்கலே
டொயோடா காரு கேக்கலே
ஜிப்ஸி கேக்கலே
சாண்ட்ரோ கார் கேக்கலே

டிவிஎஸ்ஸு சுஜுகி தந்தா இடஞ்சலாகுமா
இந்த உலகத்தில உனக்கு எதுவும் குறைஞ்சிப் போகுமா?

இடஞ்சலாகுமா
உனக்கு என்னா குறஞ்சிப் போகுமா?

பத்து மாடி வீட்டுக்குள்ள ஏஸி ரூமு கேக்கவில்ல
பொறந்த நாளுக்கெல்லாம் கேக்குகளும் கேக்கவில்ல

என்னாப்பா கேட்டோம்
நாங்க ஹவுஸிங் போர்டா கேட்டோம்
ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

----
யாரு யாரையோ சினிமா ஹீரோ ஆக்கறே
வெத்து வேட்டையும் எம்.எல்.ஏ மந்திரி ஆக்கறே

டிவியில சீரியலு நடிக்க மாட்டோமா
ஒரு கவுன்சிலரா ஆகிப்புட்டா அடிக்கமாட்டோமா

நடிக்க மாட்டோமா
நாங்க எதுவும் அடிக்கமாட்டோமா

உசந்து போனவனும் ஆடுறான் பேயாட்டத்தில்
வசமா மாட்டிக்கிட்டோம் வாழ்க்கையென்னும் போராட்டத்தில்

நீ எழுதி வச்ச கணக்கா
இது உனக்கு நல்லா இருக்கா

நீ எங்கள மட்டும் கழிச்சுவிட்டு
கூட்டிவிட்டா கணக்கா?


இந்தப் பாடல் ஏனோ பிடித்திருக்கிறது. சொல்லப்பட்டிருக்கும் கருத்து, வார்த்தைகளின் எளிமை, எண்பதுகளின் இளையராஜா ட்ரேட்மார்க் இசை, சென்னை மொழி, உன்னிகிருஷ்ணன் குரல், அதிகமாக சன் டிவியில் ஒளிபரப்பாமை, என எல்லாமே சரி விகிதாசாரத்தில் அமைந்த பாடல். ராகா.காமில் கூட கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான்.

பாடலைக் கேட்க

ஞாயிறு, மார்ச் 28, 2004

நெஞ்சில் நிற்கும் உணர்வை பாதிக்கும் வலைப்பதிவு தொடர்?

என்னுடைய அடுத்த கருத்துக் கணிப்பு, வலைப்பதிவில் தங்களின் சிந்தனையைத் தூண்டி உள்ளத்தை மகிழ்வித்தத் தொடர் எது என்பதை தெரிந்து கொள்ளச் செய்யும்.

கீழே சிலர் எழுதிய (என்னுடைய நினைவில் நிற்கும்) தொடர்களை குறிப்பிட்டுள்ளேன். ஒருவரிடமிருந்து ஒரு தொடர் மட்டுமே கணிப்பில் சேர்த்துக் கொள்ள ஆசை. தொடர் என்பதற்கு அடையாளமாக மூன்று பகுதிகள் அல்லது நாலு கிலோபைட்டாவது வந்திருத்தல் அவசியம்.

எனக்கு உதவியாக பின்னூட்டங்களின் மூலமோ bsubra at india . com என்னும் மின்னஞ்சல் மூலமாகவோ நான் தவறவிட்டவர்களையும், ஒன்றுக்கு மேல் சுவையான தொடரை எழுதியவர்களிடமிருந்து எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொன்னால் சௌகரியமாக இருக்கும். தங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

(ஒன்றுக்கு மேல் வலைப்பதிந்தவர்களில், என்னுடைய தேர்ந்தெடுப்பு (**) என்பதன் மூலம் சுட்டப்பட்டுள்ளன.)

1. அருண்
- தராசு
- நச் பூமராங்
- நெத்தியடி (**)
- பாகிஸ்தானில் இந்தியா: ஒரு நாள் போட்டி பதிவுகள்

2. பத்ரி
- சட்டமன்ற உரிமை மீறல்
- ஜெயலலிதா வழக்குகள்
- கிரிக்கெட் லஞ்சம்
- தொலைதொடர்பு நிறுவனங்கள்
- ஸ்டார் நியூஸ்
- தமிழில் வலைப்பதிவு
- தமிழ் இணையம் 2003
- நீதித்துறையில் சீர்திருத்தங்கள்
- குருமூர்த்தியின் கட்டுரைகள் பற்றிய கருத்துகள் (**)
- ப. சிதம்பரம் தொடரின் விமர்சனங்கள்
- விளம்பரங்கள் பற்றிய பதிவுகள்
- சங்கம்: மாலன் சந்திப்புகள்
- தமிழ் இலக்கியம் 2004 மாநாடு
- பத்திரிகை சுதந்திரம்
- பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்
- திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு
- தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்
- திறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம்
- ழ கணினி அறிமுகம்

3. பாலாஜி - பாரி
- நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்

4. கண்ணன்
- வைகைக்கரை காற்றே!

5. காசி
- அமேரிக்க சாலைப் போக்குவரத்து அனுபவங்கள்
- வலைப்பதிவுகள் பற்றி ஒரு தொடர்
- என் பைக்கணினி அனுபவங்கள்
- சில விளக்குகள், சில வழிகாட்டிகள் (**)
- திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள்
- கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு

6. மதி
- வேம்படி மகளிர் கல்லூரி விடுதி (**)
- Inuit (இனுயிட்)
- நேரமோ நேரம்

7. மீனாக்ஸ்
- உனக்கு அல்வா; எனக்கு அவள்

8. முத்து
- தேடுங்கள் கிடைக்கும்.. கூகிள். ...

9. பரி
- விளையாட்டாக ஒரு பாடம்

10. பவித்ரா
- அலைபாயுதே...........ஏஏஏஏஏஏ!

11. பா. ராகவன்
- திசைகள் இயக்கம்: இலக்கியச் சந்திப்பு
- பாகிஸ்தான்: முஷர·ப் (**)
- தமிழ் இலக்கியம் 2004 மாநாடு
- பாரதிய பாஷா பரிஷத்: பதிவுகள்

12. வே.சபாநாயகம்
- நினைவுத் தடங்கள்

13. செல்வராஜ்
- "இனிய தோழி சுனந்தாவிற்கு...!"

14. சுபா
- Recollecting my teaching experiences
- Penang
- Travelog - Seoul, S.Korea
- மலேசியா
- JK's Letters to the Schools (**)
- ஜெர்மனி

15. சுந்தரவடிவேல்
- எங்கம்மாவின் பழமொழிகள்

16. தங்கமணி
- பொய்ச்சாத்திரப் பேய்கள்

17. வெங்கட்
- ஜப்பானிய பழக்கவழக்கங்கள்
- காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (**)
- மின்புத்தகங்கள்
- அறிவியலில் மொழியின் தேவை
- மைக்ரோஸாப்ட் பதிவுகள்
- மூன்றாவது வலை
- முழு நீலத் தமிழ்ப் படங்கள்

(என்னுடைய செவ்வாய் இரவு - இந்தப் புதிய கருத்துக் கணிப்பு வலையேறும். அதற்கு முன்
மறுமொழிகள் மூலம் விட்டுப்போனவர்களை சொல்பவர்களுக்கு என்னுடைய நன்றி :)

வெள்ளி, மார்ச் 26, 2004

நட்சத்திர லைப்ரரி - பாலகுமாரன்

தொகுப்பு : சந்துரு

விஸ்வநாதனின் மனிதநேயம் என்ற கவிதைப்புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. புதுக்கவிதை என்று சொல்லப்பட்டாலும் மரபுக்கவிதை ஒட்டிய அவருடைய எழுத்தில் நல்ல சுவையிருக்கும்.

Baalakumaran‘‘ஏசு நாதரும் விஸ்வ நாதரும்
நேசம் வைத்த நம்
நெஞ்சின் உணர்வுதான்
கன்னி மேரியோ கன்யா
குமரியோ
தன்னை அறிந்தவர் கண் ணில் ஒன்றுதான்
பொய்யை மட்டுமே
போற்றும் வாழ்க்கையில்
தெய்வ உண்மைகள்
தெரிவதில்லைதான்
மண்டைக் காட்டிலே
மனித சக்திகள்
சண்டை போடவா சமயம்
வளர்ந்தது?
பெண்டு பிள்ளைகள் துண்டம்
துண்டமாய்க்
கொண்டு போகவா கோவில்
வைத்தது?
மத வளர்ச்சியா? மனித நேயமா?
எது உயர்ச்சியாய் இவர்க்குப் பட்டது!’

கவிஞர் விஸ்வநாதனுக்குத் தனியாக கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பதில் இதோ, இங்கேயே அதைப் பற்றி எழுதி விட்டேன்.

‘சமரசம்’ என்று ஒரு இஸ்லாமிய மாத இதழ் எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் விடாது படிப்பது வழக்கம். சமீபத்திய சமரசத்தில், ‘ஹாஜிகளே என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று பாகிஸ்தானிய சிந்தனையாளர் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா சமயத்திலும் இடித்துரைப்பு நிகழத்தான் வேண்டும் என்பதை எனக்கு அந்தக் கட்டுரை தெளிவாகச் சொல்லியது.

படிப்பது ஒரு பெரிய சுகம். அது நல்ல ஒரு காதற் பெண்ணோடு கைகோர்த்து சுற்றித் திரிவதுபோன்ற இதம்.

நன்றி: குமுதம்.காம்

வேலை கெட்ட வேலை :)

எனக்கு வேற வேலையே கிடையாது என்பது போல் தோன்றியதால், இன்னுமொரு சுய பரிசோதனைச் சாவடி பக்கம் நுழையச் சொன்னார். நிறைய கேள்வி, நடுநடுவே அதை இன்ஸ்டால், இதை நிறுவவா, என்ற சில தொல்லைகளுக்கு 'NO'வும், மற்ற சுவாரசியமான சிந்திக்க வைத்த ரசனையான கேள்விகளுக்கு உண்மையான பதிலும் கொடுத்த பின்னர் வந்த முடிவுகள்:



HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET


(Submissive Introvert Concrete Feeler )




Like just 10% of the population you are a HELPER WHO FINDS MISSING CHILDREN OVER THE INTERNET (SICF). You are very tentative in the world and introverted with people--which means you are the shy and silent type. Hence the Internet. But behind your reserved exterior lies a dedicated person with a passion for the concrete truth who wants to, in his heart of hearts, help find missing children.
God bless you.


ஆய்த எழுத்து - யாக்கைத் திரி (ஃபனா)

ஏ.ஆர்.:

ஃபனா?


ஆண்:

யாக்கைத் திரி -- காதல் சுடர்


ஏ.ஆர்.:

அன்பே


ஆண்:

ஜீவன் நதி -- காதல் கடல்


ஏ.ஆர்.:

நெஞ்சே


ஏ.ஆர்.:

பிறவி பிழை -- காதல் திருத்தம்
நெஞ்சே

இருதயம் கல் -- காதல் சிற்பம்
அன்பே


ஆண்:

யாக்கைத் திரி -- காதல் சுடர்


ஏ.ஆர்.:

ஃபனா?


குழு:

தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், துறவோம்
தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம்



பெண்:

ஜென்மம் விதை -- காதல் பழம்
லோகம் த்வைதம் -- காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம் -- காதல் பிண்டம்
மானுடம் மாயம் -- காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்


ஆண்:

யாக்கைத் திரி -- காதல் சுடர்


ஏ.ஆர்.:

அன்பே


ஆண்:

ஜீவன் நதி -- காதல் கடல்


ஏ.ஆர்.:

நெஞ்சே


ஏ.ஆர்.:

பிறவி பிழை -- காதல் திருத்தம்
நெஞ்சே

இருதயம் கல் -- காதல் சிற்பம்
அன்பே


ஆண்:

யாக்கைத் திரி -- காதல் சுடர்


ஏ.ஆர்.:

ஃபனா?


குழு:

தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம் (முன்று முறை)


ஏ.ஆர்.:

மப மப சரிகமபதநிச.... ஆ?



நன்றி: வாலி
ரசித்தவர்: உயிர் எழுத்து மடலாடற் குழு

குறள்வழி

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.


இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.


திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.


பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

நன்றி: :: திருக்குறள் - கலைஞர் உரை ::

வியாழன், மார்ச் 25, 2004

நான் கற்றுக் கொண்ட பாடங்கள்

பாடங்கள்

1. எழுதுவதில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நட்பு முறையில் கிண்டலடித்தால் கூட கேலியாகும் அபாயம் இருக்கிறது. குறை கூறும் விமர்சனத்தை வைத்தாலும், தனிமனிதத் தாக்குதலாக நினைக்க வாய்ப்புண்டு.

2. அக்கா அண்ணாக்களுடன் பிணக்குக் கொள்வது போல் அல்ல இணையச் சண்டைகள். வெட்டு, குத்து, ரத்தம் எல்லாமே virtual-ஆக வர வாய்ப்புண்டு.

3. எவருக்கும் அறிவுரை போல் தோற்றம் தரும் நினைவூட்டல் மடல்களோ, செல்ல ஐடியாக்கள் பட்டியலோ தேவையற்றது.

4. தனி மடலாக அனுப்பித்தாலும், வலைப்பதிவில் கிறுக்கினாலும், மைக்ரோசா·ப்ட்டின் அழிக்கப்பட்ட மடல்களைத் தோண்டியெடுத்தது போல் மீண்டும் கிளறப்பட்டு, உங்களுக்கு எதிராக வினையாகலாம்.

5. எவரையும் 'நண்பர்தானே... தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்', என்று நினைக்க வேண்டாம்.

6. சில சமயம் துணிச்சல் அதிகம் கொள்ளாமல் கோழையாகக் காட்சியளிப்பது நல்ல பெயரையும், வீரராகத் தோற்றம் காண்பிப்பது தியாகியாகவும் -- பார்ப்பவருக்கு மயக்கத்தை உண்டு செய்யலாம்.

7. பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஜெயலலிதாவையும் ஜார்ஜ் புஷ்ஷையும் விமர்சிப்பதே non-controversial and the secret to remain unbranded. அப்படி விமர்சிக்கத்தான் வேண்டுமென்றால் முகமூடி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

8. கருப்பு-வெள்ளையாக எந்த விஷயத்தையும் அணுக கிடையாது. எல்லாமே shades of grey.

9. விருந்தினர்களின் வீட்டில் அவர்களுக்காக பாத்திரம் கழுவும் வரை நம்ம வீடு. நமக்காகவும் உழைக்க ஆரம்பித்தால் அவர்களின் சொந்த வீடாகி நாம் அன்னியனாகப் போய்விடுவோம்.

10. இந்த மாதிரி பாடங்களை வெளியில் சொல்லாமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு 'குப்பைத் தொட்டி'யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

செய்தித்தாள் வடிவில் தினமணி


தினமணியை அச்சு வடிவில் படிக்கலாம்:

தமிழகம் இருள்கிறது; அது நாடு முழுவதுவும் பரவுகிறது: கருணாநிதி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஐநா. வளர்ச்சிப் பிரிவு, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவை 6 சதம் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளது. இந்தியா ஒளிரவில்லை; புளுகுகிறது. 100 கோடி மக்களில் 40 சதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. 100 கோடியில் 33 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவு, 14 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. 23 கோடி பேருக்கு பாதுகாக்கபபட்ட குடிநீர் இல்லை. 42 கோடி பேருக்கு ஒரு நாள் வருவாய் ரூ.45-க்கும் குறைவு. இந்தியரில் 29 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

மேலும் ஆண்டுக்கு மலேரியா, காசநோயால் 4 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99-2000 ஆண்டுகளில் நாட்டின் உணவு உற்பத்தி 21 கோடி டன். ஆனால் 2002-03ம் ஆண்டில் அது 18 கோடி டன்னாகக் குறைந்தது.

மேலும் மகளிருக்கு நேரும் அவலங்கள் ஏராளம். 30 4நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார். 42 நிமிடத்துக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 49 நிமிடத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுகிறார். 93 நிமிடத்துக்கு ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறார்.



Pazhani Tramsபழனி மலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படும் "ரோப்கார்' திட்டத்தின் நிறைவுக் கட்டப் பணி முழுவீச்சில்
நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் அமர்ந்து செல்லும் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள்.


திருக்குறள்: (எண் - 541)
அதிகாரம்: செங்கோன்மை.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

யாரிடத்திலும்(குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.


நிரந்தர நிம்மதி - என்.எஸ்.எம். ஷாகுல் ஹமீது:

"எல்லாம் விதியின் செயல் என்பது அறியாமையின் வெளிப்பாடு', "விதியை மதியால் வெல்வோம்' என்பது அறிவின் செயல்பாடு' என்று கோடிட்டுக் காட்டியிருப்பது, சோர்ந்து போயிருப்பவனை தூக்கி நிறுத்த உதவும் உத்வேக வரிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் உண்மை விளக்கம் அப்படி இருக்க முடியாது. பழியை எதன் மீதாவது போட்டு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டுமே, விதியைப் பழித்து மதியால் வென்றதாகப் பூரித்துக் கொள்ளலாம். ஆயினும் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதுபோல, எல்லாவற்றுக்கும் விதியைக் காரணம் காட்டுவதும், விதியை மதியால் வெல்லலாம் என்பதும் உண்மை நியதிக்குப் புறம்பானது.

"விதி' என்பது, என்றோ எழுதி வைக்கப்பட்ட ஓர் அழுக்கடைந்த புத்தகம் என்று நாம் நினைத்தால், "மதி' என்பது "விதி'யை வெல்லத்தக்கது என்பது சரியாகும். ஆனால், "எழுதிச் செல்லும் விதியின் கைகள், எழுதி எழுதி மேற்செல்லும்..' என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.


தென்சென்னையின் பிரச்சினைகள்: போக்குவரத்து நெரிசல்; குடிநீர்ப் பஞ்சம்

TR Baalu & Baadar Sayeedhதிருவல்லிக்கேணி, தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தேசியப் பிரச்சினைகளை விட, உள்ளூர்ப் பிரச்சினைகளே தொகுதி மக்களின் கவனத்தை ஆக்கிரமித்துள்ளன.

பொதுவாக ஜாதி ரீதியாக வாக்குகள் பிரியாத, "காஸ்மாபாலிடன்' தொகுதி. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், தாம்பரம் என பரவலாக வசிக்கும் பிராமணர்கள், அடுத்த நிலையில் தலித், வன்னியர், நாடார், முதலியார், மீனவர் சமூகத்தவரும் கணிசமாக வசிக்கின்றனர். பாஜகவோ, காங்கிரஸோ இங்கு மோதிக் கொள்ளாததால் வல்லரசாக்கும் வாஜ்பாயா? அயல்நாட்டு சோனியாவா? என்று முன்னிறுத்தப்படும் வாதம் இங்கு முக்கியத்துவம் பெறவில்லை.


Glance @ Entertainment from TN

புதன், மார்ச் 24, 2004

நான் யார்?

கண்ணன் தன்னை அறிந்து கொள்ள வைக்கும் கேள்வி-பதில் பக்கங்களை சொல்லியிருந்தார். நானும் போய் பதில் கொடுத்து பார்த்தேன்; அதன் முடிவுகள்:


Economic Left/Right: 2.12
Social Libertarian/Authoritarian: 0.56

நான் மற்ற பெருந்தலைகளுடன் ஒப்பிட்டால் எங்குள்ளேன் என்றும் பாருங்கள்:

(Politicians)


ஊடகங்கள் என்னை எப்படி மாற்றியிருக்கின்றன என்று சுய பரிசோதனை செய்து பார்த்தால் :((

நவீன 'ஜன கன மன'


Ayidha Ezhuthu

ஏ.ஆர்.:
ஓ யுவா யுவா ஒ

கோரஸ் 1:
ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் அல்ல (அல்லது வெல்ல)
காரியம் துணை

கோரஸ் 2:
ஓளியே வழியாக
மலையே படியாக
பகையோ பொடியாக
சக் சுக் சுக் சுக் கும்செய்

M:
இனியொரு இனியொரு விதி செய்வோம்

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

M:
விதியினை மாற்றும் விதி செய்வோம்

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

M:
கோரஸ் 1
கோரஸ் 2

ஏ.ஆர்.:
ஓ யுவா யுவா ஒ ஒஹோ

M:
ஆயுதம் எடு ஆணவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையைச் சுடு

ஏ.ஆர்.:
இருளை எரித்து விடு
ஏழைக்கும் வாழ்வுக்கும்
இருக்கின்ற இடைவெளி குறைத்து
நிலை நிறுத்து
ஆடி கொட்டத்தில் விட்டதை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

M:
காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

M:
கோரஸ் 1

ஏ.ஆர்.:
அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியைத் தொடு
தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியெனெ
சுயவழி அமைத்து, படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்தில்
முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து

M:
நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்
வலப்பக்கம் பூமி திரும்பி விடும்

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

M:
கோரஸ் 1
கோரஸ் 2
கோரஸ் 1

ஏ.ஆர்.:
இனியொரு இனியொரு விதி செய்வோம்

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

ஏ.ஆர்.:
விதியினை மாற்றும் விதி செய்வோம்

G:
ஓ யுவா யுவா ஒ யுவா

நன்றி: வாலி - யாஹு குழுமம்

பிகு: கொழுந்து விட்டெரியும் பிரச்சினைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை :P

மறுமொழியின் எதிர்கொரலுக்கு பின்னூட்டம் தரும் கருத்து

Interesting Commenters

செவ்வாய், மார்ச் 23, 2004

சிகரம் தொட்ட பெண்மணிகள்

தினகரன்: பா. ராகவன்

அமிர்தானந்தமயி
கமலா தாஸ்
பெனசீர் பூட்டோ
கிளியோபாட்ரா
ஆண்டாள்
டயானா
நதீன் கோர்டிமர்
சாரதா தேவி
இந்திரா காந்தி

யார் எழுதிய கவிதை?

ஈ-தமிழுக்காக நண்பர் ஒருவரிடம் கவிதை கேட்க, அவர் கொடுத்த கவிதை இது.

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க

நாளை முதல் நடக்கும் கருத்துக் கணிப்பில், யார் எழுதிய கவிதை என்று சொல்லுங்களேன்.

பாஸ்டன் பாலாஜி / சொக்கன் (நாகாஸ்) / ஹரன் பிரசன்னா / மீனாக்ஸ் / பிரகாஷ் / பா ராகவன் / (பெயரிலி) ரமணீதரன் / பிகே சிவகுமார் / உஷா / யாரும் இல்லை

(நாளை முடியும் பின்னூட்டங்கள் கருத்துக் கணிப்பில் அனைவரும் கிட்டத்தட்ட சம வாக்குகள் பெற்றுள்ளனர் :)

திங்கள், மார்ச் 22, 2004

நம்பர் 1

யாஹு குழுமங்களின் எண்ணிக்கை: மொழிவாரியாக

தமிழ்: கிட்டத்தட்ட 2,410,000 (நம்மை அடித்துக்கொள்ள எவர் இருக்கிறார்)
ஹிந்தி: இதர் உதர் 2,370,000
தெலுங்கு: చుట్టూ, చుట్టూరు 814,000 (Thats a good number?)
பெங்காலி: குத்து மதிப்பாக 753,000
கன்னடா: about 480,000 (அஷ்டே!)
மலையாளம்: About Transliterated in Malayaalam480,000
ஒரியா: ஏறக்குறைய 180,000


ஆதாரம்/நன்றி: ScreamCast

"இப்படி ஒரு மாமியார் இருப்பாரா"


Kolangal Serial by Sun TV
தமிழ் சிஃபி.காம்: "இந்த மாதிரி மாமியாருங்க எக்கச்சக்கமா இருக்காங்க. சும்மா.. அப்படியே கிராமப் பக்கம் போய்ப்பாருங்க. அப்ப தெரியும் இதைவிட கரிச்சு கொட்ற மாமியாருங்க நிஜமாவே இருக்காங்க.

தேவயானி கேரக்டரே வித்தியாசமானது. குடும்பத்தில் அவங்க மூத்த பெண். தன்னோட பொறுப்பை உணர்ந்து எல்லா விஷயங்களையும் அமைதியாக சகித்துக்கொள்கிற உறுதியான பெண். அவளால் மாமியாரை எதிர்த்து பேசமுடியாது என்று அர்த்தமல்ல. யாருக்கும் தன்னை புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்று விலகிவிடுகிறாள். அவ்வளவுதான்."

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம்.

குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?


to be frank with you , நான் ஆ.வி பாத்துட்டு கிளப்புக்குள்ள சேந்ததே ஒரு பார்வையாளனாகத்தான். பங்கேற்பாளனாக இல்லை. . ஹா இது தான் நமக்கான இடம். தடையில்லாம் இனிமே படிக்கலாம்னு நெனைச்சேன். உங்க புஸ்தமெல்லாம் படிச்சது, புடிச்சது இதெல்லாம்

" அப்பா. நலம். ஹாஸ்டலில் மெஸ்ஸுக்கு பணம் கட்டவேண்டும் (பொய்) .உடனே ஐநூறு ரூபாய் தந்தி மணியார்டரில் அனுப்பவும்" அப்படிங்கற மாதிரியான கடிதம் தவிர்த்து, வேற எழுதறது எனக்கு பழக்கமே இல்லை. ஒரு ஆங்கில மாதமிருமுறை பத்திரிக்கையில், கரஸ்பாண்டென்ட்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதால், ஆங்கிலம் மட்டும் சுமாராக வரும். கிளப்புக்குள்ளே சேந்தப்புறந்தான் எனக்கே தெரியும் ஆங்கிலத்த விட தமிழ் நல்லா வருதுன்னு.

எவ்ளோ அசையாக வந்தேன் தெரியுங்களா ? ஒரு நாள் ஓய்வா இருந்தப்போ பழைய மடல்களை யெல்லாம் பாத்தேன் . மனசு ஆத்து ஆத்து போறது சார். எவ்ளோ நல்ல டாபிக், எத்தனை பேரோட பங்களிப்பு, மனசு புண்படாத கால் வாரல்கள், புதுசு புதுசான செய்திகள், எத்தனை எழுத்தாள , நூல் அறிமுகங்கள். அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியலையே? சே. அப்பமே நான் சேந்திருக்கணும் .

புச்சு புச்சா இன்னும் எழுதவேண்டியது எவ்ளோ இருக்கு?

Madras Musings s.முத்தையா பத்தி,
'கரைந்த நிழல்கள்' பத்தி,
நகைச்சுவை துளியுமில்லாமல் அங்கதம் எழுதும் இ.பா பத்தி,
ஆர்.சூடாமணியின் கதைகள் பத்தி,
ஜெயகாந்தனின் தற்போதைய சமரசங்கள் பத்தி,
கிருத்திகாவின் 'வாசவேஸ்வரம் பத்தி,
எம்.வி.வி யின் 'பெட்கி' பத்தி,
திசைகள் பத்தி,
சாவி உருவாக்கிய எழுத்தாளர்கள் பத்தி,
சுப்ரமண்ய ராஜு 'கசடதபற வில்' எழுதிய மீராவின் கவிதைதொகுப்பின் விமர்சனம் பத்தி ( மீரா நல்ல கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை - சு.ராஜூ),
ஆத்மாநாம் கவிதைகள் பத்தி, ;
'கால்களின் ஆல்பம்' பத்தி,
சிங்கப்பூர் அரவிந்தன் பத்தி,
வத்சலாவின் கவிதைகள் பத்தி,
சத்தியமாக கண்ணில் நீர் வரச்செய்த 'தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் ' என்கிற ஈழக்கவிதை பத்தி,
Aldous Huxely பத்தி,
பாதிராஜ்யம் பத்தி,
யே ஜோ ஹை ஜிந்தகி பத்தி,
'different strokes' பத்தி,
நளினி சிங்கின் டெலி ரிபோர்ட்டிங் பத்தி,
M.J. அக்பர் பத்தி,
அல்பாயுசில் போய்விட்ட அற்புதமான ந்யூஸ் ப்ரசென்ட்டர் அப்பன் மேனோன் பத்தி,
வயலார் பாட்டு பத்தி,
சௌந்த்ர்யாவின் த்வீபா பத்தி,
எம்.எஸ்.சத்யு வின் கரம் ஹவா பத்தி,
'பரதனின் 'தகரா' , 'சாவித்திரி ' பத்தி,
ஜென்சி யோட பாடல்கள் பத்தி,
சுதா வின் 'குறையன்றுமில்லை' பத்தி,
phaneesh murthy யின் திருவிளையாடல் பத்தி,
இளையராஜாவின் கன்னட திரைஇசை பத்தி,
புட்டண்ணா கனகாலின் 'நாகரஹாவு' பத்தி,
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் பத்தி,
அகில பாரத நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய மாலனின் sci-fi ரேடியோ நாடகம் பத்தி,
ருத்ரையா பத்தி,
ஆற்றூர் ரவிவர்மா பத்தி,
'சங்க சித்திரங்கள்' பத்தி,
அ.ச.ஞா வின் தமிழ் பத்தி,
வாத்யாரின் 'ஆர்யபட்டாவிற்கும்' எஸ்.பாலச்சந்தரின் 'அந்த நாளு'க்கும் உள்ள ஒற்றுமை பத்தி,
டி.ஆர் ராமச்சந்திரன் பத்தி, காளி.என்.ரத்தினம் பத்தி,
ஞானசவுந்தரி பத்தி, மகேந்திரனின் 'மெட்டி' பத்தி, அழியாதகோலங்கள் பத்தி,
பாலுமகேந்திராவின் திண்ணையில் வந்த நேர்காணல் பத்தி,
அற்புதமான நடிகை ஷோபா பத்தி, எஸ்.வி ரங்காராவின் குணச்சித்திர நடிப்பு பற்றி,
உங்கள் கனவுக்கன்னி ஜெயசித்ரா பத்தி,
டில்லி பாரதி பாலு என்கிற 'நகுபோலியன்' பத்தி,
கோவை ஞானி பத்தி,
பெங்களூர் ரவிச்சந்திரன் பத்தி,
எம்.ஜி.வல்லபனின் தைப்பொங்கல் படம் பத்தி,
அக்கிரகாரத்தில் கழுதை இயக்கிய ஜான் பிரகாம் பத்தி,
ரா.கி.ர வின் கிருஷ்ணதேவராயர் பத்தி,
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாபாட்டி பத்தி ,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹாம்பர்கர் பிட்ஸா உண்டு 'கஷ்டத்தில்' ஜீவித்திருக்கும் நம் பரதேச மென்பொருளாளர்கள் பத்தியும் , அவர்களைப் பற்றி எங்கள் சுதேசி மனங்களில் ஏற்பட்டிருக்கும் 'தட்டையான பிம்பம்' பத்தியும் எழுத வேண்டியது எவ்ளோ இருக்கு?

இன்னொரு முக்கியமான இசைத் தடமான country music பற்றி யார் எழுதப் போகிறீர்கள்? ஹாங்க் வில்லியம்ஸ், ஜெண்டில்மேன் ஜிம் ரீவ்ஸ் என்று தொடங்கி நடாலியா இம்ப்ரோக்லியா வரை நீளும் சுவையான வரலாறு இல்லையா அது?


இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்பதற்கு ராகாகியில் இரா. முருகன் கொடுத்த முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:

Dear all,

I am reproducing an interesting mail I reced from one of our friends. (u can easily guess who it is from the writing style :-)

What an impressive list of items to cover in RKK! Thanks dear ....

Why can't we start forthwith?

rgds,
era.murukan

வாழ்க்கை - சுஜல்

(c) Corbis.comஅம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை
அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ரிப்பன்
பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிரிவினை
பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்
இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்...

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணையிருக்க
அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்
அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்
பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடசி நேர முகத்தையும் எண்ணி ...

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்...
உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்
என அமெரிக்க வாழ்க்கை!

ஞாயிறு, மார்ச் 21, 2004

தினம் ஒரு கவிதை

Happy Birthday to DOK

நான் முன்பே வலைப்பதிந்தது போல் எனக்கும் யாஹு குழுமங்களுக்கும், தொடர்பு கொடுத்த 'தினம் ஒரு கவிதை' ஆறாவது வருடத்தில் கால்பதிக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள்.

யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year
நேற்று புத்தாண்டு பிறந்த தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

பிகு: காமிரா இல்லாமல் வசந்த கால பூக்காட்சிக்கு சென்றது வருத்தம்தான்; ஆனால், அவர்கள் செய்திருக்கும் தோட்ட வித்தைகளுக்கு ஏற்ப வீடு இல்லாமல் இருப்பதும் சௌகரியமே. (வேலை அதிகம் செய்ய வேண்டாமே!)

வெள்ளி, மார்ச் 19, 2004

வாரம் ஒரு பட்டியல்: பி.கே. சிவகுமார்

அரசியலும் சமூகமும்

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும
ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை
ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
பொருந்தாக் காமம்

சிறுகதை

கோயில் விளையாட்டு
Humor In Maraththadi for the New Year - (1)
Humor In Maraththadi for the New Year - (2)
Humor In Maraththadi for the New Year - (3)

கவிதைகள்

ஞாபகங்கள்
யேன் செய்ததில்லை?
பி.கே. சிவகுமார் கவிதைகள்
எந்திர வாழ்க்கை
பி.கே. சிவகுமார் கவிதைகள்
என் காதல்....
எட்ட நின்று எட்டிப் பிடி தேசத்தை
இயந்திர நனைதல்
தமிழ் மாநாடு
பி.கே. சிவகுமார் கவிதைகள்

இலக்கியக்கட்டுரைகள்

வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் "வாழ்க்கைச் சுவடுகள்"
வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் "வெறும் பொழுது"
புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கியமும் - கருத்துப் பரிமாற்றங்கள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
தனித்தமிழ் என்னும் போலி - (1)
தனித்தமிழ் என்னும் போலி - (2)

பாரதி சின்னப் பயல் - ஹரி கிருஷ்ணன்

பாரதியார் கவிதைகள்:

பாரதி என்ற பெயரைக் கேட்டாலே மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது. பாரதிக்குப் பராசக்திப் பித்து அதிகமா அல்லது கண்ணன் பித்து அதிகமா என்று கேட்டால் முன்னது என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். பாஞ்சாலி சபதத்தில் இதற்கு விடை இருக்கிறது.

அவைக்கு ஒரு வேண்டுகோள். பாரதியின் உரைநடை பற்றியும் பேசலாம். அதிகம் கவனிக்கப்படாமலே இருக்கும் துறை அது. கட்டுரை, சிறுகதைகள், ஆங்கில எழுத்து, பத்தி¡¢க்கைக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளுக்கும் தன் பங்கைச் செலுத்தியிருப்பவன் பாரதி. Fox with a Golden Tail என்ற கூடார்த்தக் கதை பாரதி தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் நகைச்சுவை எழுதுவதில் வல்லவனாய் இருந்தான் என்பதற்குச் சான்று. தாகூர் சிறுகதைகளைத் தமிழிலும் ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது பலருக்குத் தொ¢யாது. அவற்றைப் பற்றியும் பேசலாமே.

(பலருக்கும் தெரியாதது என்னவென்றால் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அயல்நாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்திருக்கிறான். பாரதிதாசனே குறிப்பிடும் உண்மை இது.)

யாப்பறிந்தவர்கள் பாரதியின் யாப்பியல் கொள்கைகளை விவாதிக்கலாமே. இலக்கணம் அறியாத வெள்ளைப் புலவன் என்ற உரையின் உண்மை என்ன என்பதையும் பார்க்கலாமே. (வெளிவிருத்தம் என்ற வகைக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் பாரதியின் ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா என்ற பாடலை அல்லவா பார்க்க வேண்டும்.)

அதிகம் அறியப்படாத பாரதி கவிதைகளையும் அவ்வப்போது வெளிவரும் பாரதி ஆராய்ச்சி நூல்கள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இந்த இழை எவ்வளவு வாய்ப்பானது! இப்படி ஓர் இழையினை ஆரம்பித்தவருக்கும் இந்த இழையை மிகுந்த ஆர்வத்துடன் இதுவரை பின்னிக்கொண்டிருப்பவர்களுக்கும் திக்குகள் அனைத்தையும் நோக்கி வந்தனம் செய்கிறேன். (பாரதி இழை வெறுமையாக இருக்கலாமா என்ற ஆதங்கம் ஒன்றையும் பார்த்தேன்.) அடடா. உங்கள் உணர்வுகள் என் கண்களைப் பனிக்கச் செய்கின்றன.

என் பங்குக்கு பாரதி சின்னப் பயல் என்ற ஈற்றடியில் பாரதி எழுதிய அவனுடைய ஆரம்பகால வெண்பாக்களை இங்கு இடுகிறேன்.

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல். (1)

இந்த வெண்பாவை எழுதியதும் காந்திமதிநாதன் அடைந்த (அவரும் அப்போது 16-17 வயது இளைஞர்தாம்) நாணம் சிறுவன் பாரதியைத் தாக்கியிருக்கவேண்டும். இன்னொரு வெண்பாவும் பாடினான்.

ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல். (2)

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 வயதுக்குள். அவைக்கு ஒரு வினா. கண்ணன் பாட்டில் பாரதி பொதுவாக ஒரு முறையைக் கடைப்பிடித்திருக்கிறான். ஆண் வடிவத்திற்குக் கண்ணன் என்றும் பெண் வடிவத்திற்குக் கண்ணம்மா என்றும் பெயர் வைத்திருக்கிறான். குழந்தை வடிவில் ஆண் குழந்தையாகவும் பெண் குழந்தையாகவும் பார்த்திருக்கிறான்.

தாய் என்ற வடிவத்தில் மட்டும் அது என்ன கண்ணன் என் தாய்? கண்ணம்மா என் தாய் என்றல்லவோ இருந்திருக்கவேண்டும்? தலைப்பில் தவறா என்று பார்த்தால் பாட்டிலும் பாரதி "கண்ணன் எனும் பெயருடையாள்" என்றல்லவோ சொல்கிறான்? இது ஏன்? (என் விளக்கத்தை முதலில் இட்டு உங்கள் கருத்துகளுக்குச் சாயமேற்ற விருப்பமில்லை.) யாரேனும் விளக்கம் தர முடியுமா?

நன்றி: மன்ற மையம்

அதிகம் தாக்குபவர் இவர்


Survey Results Thanks to Sparklit and YOU


இந்தத் தேர்தலிலும் பெருவாரியாகக் கலந்துகொண்டு வாக்களித்து ரசிப்புத் திறனுக்கு ராஜ மரியாதையும், பின்னூட்டத்திற்கு ஊக்கமும் தர அனைவரையும் ஆவலுடன் அழைக்கிறேன்.

சித்திரக் கதை

யாஹு குழுமங்களில் இப்படிப் பேசினால் -->
Pickles cartoon

இப்படி எண்ணத் தோன்றும் -->

Blondie - Dagwood courtesy of Washington Post


முடிவு இப்படி ஆகிப் போகும் -->

Pickles

வியாழன், மார்ச் 18, 2004

பார்த்ததுவே... கேட்டதுவே... நினைப்பதுவே...

Hail Pakistan
பாகிஸ்தான் குறித்த இவரின் எண்ணங்களுக்கு மறுபேச்சே கிடையாது :P அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்!?



அமுதசுரபியின் புதிய புத்தகங்களாக காந்தளகம் அனுப்பிய பட்டியல்:
1. தமிழில் இணைய இதழ்கள்: அண்ணா கண்ணன் - ரூ. 80/-
2. மலர்மன்னன் கதைகள்:மலர்மன்னன் - ரூ. 100/-
நாற்பத்தைந்து ஆண்டுகளாய் எழுதிவரும் மலர்மன்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

3. பாரதியார் சரித்திரம்: செல்லம்மா பாரதி - ரூ. 60/-
1943-இல் முதல் முதலாக வெளியான நூல். அதே வடிவில் 63 ஆண்டுகளுக்குப் பிறகும்.

4. கேப்டன் கல்யாணம்: அமரர் வசுமதி ராமசாமி - ரூ. 125/-
1959-இல் வெளியான புதினம் இப்பொழுது மீண்டும் அச்சில் வந்துள்ளது.

5. விவாதங்கள் சர்ச்சைகள்: வெங்கட் சாமிநாதன் - ரூ. 120/-
இலக்கிய முகமூடிகள், க.நா.சுவும் கோவிந்தாக்களும், வல்லிக்கண்ணனுக்கு ஒரு பாராட்டு, தமிழினி 2000, பிச்சமூர்த்தி நினைவு விழாவில், இன்னும் பல சுவையான கட்டுரைகள்.


தமிழ்நூல் இணையதளத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடினபோது கிடைத்த விடைகளைப் பாருங்களேன்! நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பேரைக் கொண்டோ, புத்தகத்தின் தலைப்பைக் கொண்டோத் தேடிப் பார்க்கலாம்.


நடைபெறும் தேர்தலை நாளையோடு ஏறக்கட்டிவிட்டு புதிய கருத்துக்கணிப்பை ஆரம்பிக்க எண்ணம்.
கேள்வி: பின்னூட்டங்களின் மூலம் கவனத்தைப் பெரிதும் கவர்பவர் யார்?
எனது எண்ணத்தில் இதுவரை உதித்தவர்கள்: 1. பத்ரி 2. டைனோ 3. பரி 4. பிரபு ராஜதுரை 5. ரமணீதரன் 6. ரவியா 7. உஷா 8. மறுமொழிகளில் எவரும் அக்கறை ஏற்படுத்துவதில்லை!
நான் தவறவிட்ட உகப்பானவர்களை பின்னூட்டத்திலோ bsubra at india . com முகவரியின் மூலமோ சொல்லுங்கள்.


புதன், மார்ச் 17, 2004

யார் இவர்?

LTTE leader Mr. V. Pirapaharan at Heroes dayTamil: "இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார். புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.

பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். 'இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

Book by Balasinghamஇலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

பண்டுருட்டியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார்."

கணை விடும் களங்கள்

ஜெயமோகனைக் கேளுங்கள் முடியப்போகிறது. அதற்கு முன் அவரின் படைப்புகளை அலசி விட்டு வினா தொடுக்கலாம். பொதுவான சில கேள்விகளைப் பாராவிடம் கேட்டு அவரது எண்ணங்களைப் பெறலாம். அப்படி எதுவும் தோன்றாவிட்டால் சில இலக்கிய-ஸ்டாண்டர்ட் கேள்விகள்:

1. படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் - நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
2. உங்கள் சம - கால எழுத்தாளர்களின் உங்களை வாசிக்கத் தூண்டிய எழுத்து யாருடையதாக இருந்தது?
3. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் Sensitivity - யை இவைகள் பாதித்தனவா அல்லது மேலும் எழுத வித்திட்டதா?
4. சென்னை நூல் வெளியிட்டு விழாக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
5. பொதுவாக இன்று "சாதி" எழுத்துக்கள் "தனித்த அடையாளம்" என்ற பெயரில் உருவாகின்றனவே? இது ஆரோக்கியமான போக்கா?
6. டி.வி. மெகாசீரியல்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?
7. நீங்கள் ஏன் இலக்கியத்தின் மற்ற வடிவங்களை பிரயோகிக்கவில்லை. அதாவது கவிதை உலகில் நீங்கள் பரவலாக கவனம் பெறாமல் போன காரணம் என்ன?
8. தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?
9. உங்கள் படைப்புலகத்திற்கு உந்து சக்தியாய் அமைந்த இளமைக்கால அனுபவங்களைக் கூறமுடியுமா?
10. அடுத்து என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்?

நன்றி: வெப்-உலகம்

வெப்-உலகம்: நேர்காணல் - எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்
கேள்வி : `விஷ்ணுபுரம்' நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி' கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்' எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா' மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்' நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா' இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்' சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்' என்ற `Apocalypse' ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை' நாவலில் வரும் Apocalypse' ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி' என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி' என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி' புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் - ரிலிஜன் - மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி' என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்' என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்' மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்' நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்' நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்' நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்' வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க ---> வெப்-உலகம்

செவ்வாய், மார்ச் 16, 2004

சூரியனும் நிலாவும்....... - பிரேம் நிமல்

பிரேம் நிமல் வலைப்பதிவு:
"பூமிதான் அம்மா
நிலா தம்பி
சூரியன்தான் அண்ணன்
....
....
தானே விளையாட்டில் வெற்றி
கொள்ள வேண்டும் என்ற
ஆசையில் அங்கேயே நிற்கிறான் அண்ணன்...

அங்கே சென்றால் நாம் தோல்வி
அடைந்து விடுவோமோ
என்ற பயத்தில் செல்லாமல்
அம்மாவை சுற்றுகிறான் தம்பி....

அம்மாவும் தன் வேலையை
பார்த்துக்கொண்டிருக்கிறாள்.....

இத்தனை காலம் முடிந்தும்
அண்ணன் தம்பி பக்கத்திலும்,
தம்பி அண்ணன் ப்க்கத்திலும்,
செல்லாமல் இருக்கின்றனர்................
"

ஆண்டுவிழா மலர் - ஆசிப் மீரான்

தமிழ்-உலகம் - ஆசிப் மீரான்: வருகிற மே மாதம் முதல்வாரம் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் நான்காமாண்டு நிறைவுவிழா நடைபெறவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இந்த விழாவின்போது கணினியில் தமிழ் தொடர்பான செயல்முறைவிளக்கம்,குறுந்தகட்டில் தமிழ் மென்பொருட்களின் இலவச வினியோகம், கவியரங்கு, நூல் வெளியீடு ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம் பெறப் போகின்றன.

அமீரகத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் குறைந்தது 500 பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விழாவின்போது வெளியிடுவதற்காக ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் வேலைகளிலும் நாங்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்..இதற்காக தமிழறிஞர்கள்,ஆன்றோர் பெருமக்களிடமிருந்து ஆக்கங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

1000 பிரதிகள் அச்சிடப்படும் இந்த் ஆண்டு விழா மலரில் உங்களது ஆக்கமும் இடம் பெற வேண்டுமென்றால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள்ளாக உங்களது படைப்புகளை எனக்கு அனுப்பித் தரும்படி மிக அன்புடன் வேண்டுகிறேன்.

aaNdu vizaa malar padaippu என தலைப்பிட்டு அனுப்பினால் மிக நன்றியுடையவனாவேன்.

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு விழா மலரைச் சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் ஆக்கங்களை அனுப்பித தருமாறு மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,
ஆசிப் மீரான் - aj at emirates . net . ae
(அமீரகத்தமிழிணைய நண்பர்களின் மலர் குழுவினருக்காக)

வாக்களித்த அனைவருக்கும் நன்றி



அடுத்த கருத்துக்கணிப்பு:
தங்களை எண்ணங்களை அதிகம் தாக்கம் செய்யும் வலைப்பதிவு எது?
1. ஆப்பு 2. பத்ரி 3. இட்லி-வடை
4. கார்த்திக்ராமாஸ் 5. பெயரிலி 6. பாரா
7. ரஜினி ராம்கி 8. தங்கமணி 9. வலைப்பூ
10. அனைத்து வலைப்பதிவுகளிலும் நகைச்சுவையையே மிளிர்கிறது.

தங்கள் மேலான ஓட்டைப் பதிவு செய்ய (விரைவில்) அழைக்கிறேன் :)

திங்கள், மார்ச் 15, 2004

திருட்டு ஆய்த எழுத்து

தயவு செய்து ஒலிப்பேழையோ, வட்டோ வாங்கி விடவும். அது வரையில் பாடல்களைக் கேட்பதற்கு:

ஃபனா
குட் பை நண்பா
ஜனகனமண
நெஞ்சம் எல்லாம் காதல்
சண்டைக் கோழி
டோல் டோல்

நன்றி: டீகட

அங்கும் இங்கும்

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வதில் கருணாநிதியும் ஜெஜெவும்தான் தேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆதாரமற்ற குற்றசாசாட்டுகளை வைப்பதில் தமிழருக்கு எந்த விதத்திலும் ஜான் கெர்ரியும் சளைத்தவரல்லர். அபாண்டமாகப் பழி போடுவதை விட நேரடியாக பச்சை பச்சையாகத் திட்டுவதே மேலா?

அப்படியானால், வெஸ்ட் விங், 24, சிக்ஸ் ஃபீட் அண்டர் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்குப் பிடித்த கெட்ட வார்த்தைகளைப் பார்க்கலாம். (இந்த மாதிரி சுட்டி கொடுப்பதற்காக எந்தத் தகாத வார்த்தையை உபயோகித்தீர்கள்?)

இந்த மாதிரி உரல்கள் ஏன் கொடுத்தாய் என்று கேட்டால் ரிபப்ளிகன் பொன்மொழிகள் பலவற்றுள் மாதிரிக்கு ஒன்றை மொழிபெயர்த்தால் தன்னிலை மறுப்புக்கு உதவும்:
நான் தளபதி - யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை; ஏன் செஞ்சேன், எதற்காக சொன்னேன் என்று எல்லாம் விளக்க வேண்டாம். ஜனாதிபதியாக இருப்பதன் பலன் இதுதான். மற்றவர்கள், தான் செய்வதற்கு நியாயம் கற்பிக்க அவசியம் இருக்கலாம்; நான் யாருக்கும் விளக்கம் சொல்ல கடமைப்பட்டவன் போல் தோன்றவில்லை. - ஜார்ஜ் புஷ் (நவ. 19, 2002)

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கமல் சந்திப்பார் என்று தெரிகிறது என்னும் செய்தியை நிலா முற்றம் சொல்கிறது. இந்தச் செய்தி உத்தரவாதமானதுதானா என்று கூகிளில் தேடலாம் என்றால் நம்பாதே என்று அறைகூவுகிறது எனக்கு வந்த ஒரு மடல். அமெரிக்கரின் வசம் இருக்கும் கூகிளும் ஃப்ரெஞ்சுக்கு எதிராகத்தான் பக்கங்களை வரவழைத்துத் தருகிறது போல.

ஆனால், வதந்திகளை நம்பக் கூடாது. புக்கர் பரிசை நூலிழையில் தவறவிட்ட மோனிகா அலி ஆரஞ்சு பரிசையாவது வெல்லலாம் என ஆருடம் நிலவுகிறது. தாய்பே டைம்ஸ் கூடப் புகழும் ரூபா பாஜ்வா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜும்பா லஹரி, காம்பிளியின் கதை சொல்லும் சிமாமந்தா என்று சரியான போட்டி நிலவுகிறது.

பிகு: இல்லிஸ்ட்ரேடட் வீக்லியில் வாராவாரம் 'Separated at Birth' என்ற பகுதியின் நினைவாக ரெஹ்மான்/மாதவன் படம்.

ஆய்த எழுத்து - பாடல்கள்

எம்பி3யில் கேட்க.

ரியல் மீடியாவில் கேட்க:
குட் பை நண்பா - ஷங்கர் மஹாதேவன், சுனிதா சாரதி, லக்கி அலி, கார்த்திக்
ஜனகனமண - ஏ. ஆர். ரெஹ்மான், கார்த்திக்
சண்டைக் கோழி - மதுஸ்ரீ, ஏ. ஆர். ரெஹ்மான்
டோல் டோல் - ராப்: ப்ளேஸ்/ஷாஹீன்
நெஞ்சம் எல்லாம் காதல் அத்னான் சாமி, சுஜாதா
ஃபனா - ஏ. ஆர். ரெஹ்மான், சுனிதா சாரதி, ஷாலினி சிங்

நன்றி:
1. டீகட பின்னூட்டங்கள்
2. ஏ. ஆர். ரெஹ்மான்

ஞாயிறு, மார்ச் 14, 2004

தெரிந்தது மட்டும் vs. கற்றதும் பெற்றதும்


Non Sequitur


பிகு: தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எல்லாம் யோசித்து வழுக்கையாக வேண்டாம்.

அங்கம்மாளின் கவலை - ஞானக்கூத்தன் (1981)

பலகைக் கதவில் நான்காவதனைக்
கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்
அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்
வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்
பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்
கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு
இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்
சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.
பார்க்காதவள் போல் அவளிருந்தாள்
சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்
முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல
கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்
என்ன வென்று அவள் கேட்கவில்லை
என்ன வென்று அறிந்திருந்ததால்

சைகிளில் வந்தான் சுப்பிரமணியன்
அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்
காலைப் பொழுதில் இரண்டாயிற்று
இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

"என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?"
"உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி."
அங்கம்மாள் இந்தப் பேச்சை கேட்டு
உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

"நாணிக்கிரண்டு எனக்கிரண்டு
நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்கென்று
சுப்பிரமணியன் வண்டியை விட்டுக்
கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்
ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்
வேகம் குறையாத நடை பயின்று
கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்
கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்
அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்
"என்ன முறைக்குது அங்கம்மா?" என்றான்
எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்
வருகிறான் அங்கே ரத்தினம்" என்றான்
அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா
கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

'என்னடா அங்கே காலை வேளையில்
கிண்டல் கலாட்டா நமது கடையில்?
ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

"வாடா இன்னும் மத்தவனெல்லாம்
வரலியா?" என்றாள் அங்கம்மா
"என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்
அடாபுடா? வெட்கம்" என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து
நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்
திட்டினாள்
"கணவன் மனைவி உறவில் இதெல்லாம்
சகஜம்" என்று ரத்தினம் சொன்னான்.

"நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?
உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்
பட்டங்கள்?" என்று பொரிந்தாள் அங்கம்மா.
'அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்
சுருட்டுக் கேட்டெ'ன்று நாராயணன் சொன்னான்

"அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை
விட்டு விடாதே"யென்று ரத்தினம் கெஞ்சினான்
அந்தச் சமயம் வேணுவும் வந்தான்
சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட
வேணுவின் கையை அவள் மடக்கினாள்
சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி
அத்து மீறினால் உதை என்று சொல்லி என்
பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்
வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்
சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட
நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்
என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்
கோபம் பொரிய உங்கம்மாவைப்
பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்
எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு
சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்
வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்
ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்
வந்து போனதும் கோபாலன் மெல்ல
முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு
தாமதம் ஏனென்று கையை நீட்டினான்

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்
தட்டிய கையைத் தீண்டிய தன் கையை
முத்தம் கொடுத்து பிறர்க்கு நீட்டினான்
அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்
பிறக்காத பிறவிகள் நீங்களென்று
ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்
உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்
முத்தம் கூடக் கிடைத்துவிட்டது
சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று
வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று
அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று
அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்
இன்னும் தெருவில் போவோர் வருவோர்
அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு
சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்
தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி
அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்
கூட்டிக் கொண்டு போகலாமென்று
ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்
வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்
அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.
'என்ன சாமி எனக்கும் வயது
நாளை வந்தால் ஐம்பதாகிறது
இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்
நினைக்காமல் போகக் காரணம் என்ன?'

----
ஞானக்கூத்தன் கவிதைகள் - விருட்சம் - ரூ. 80.00
virutcham@mailcity.com

ஆய்த எழுத்து



நன்றி: 'ஐகாரஸ்' பிரகாஷ்

வெள்ளி, மார்ச் 12, 2004

கருத்துக் கணிப்புகள்

இது தேர்தல்களின் காலம். தேர்தல் என்றாலே கருத்துக் கணிப்புகள் அவசியம். உங்களின் இலவச ப்ளாஃக்ஸ்பாட், ப்ளாஃக்ட்ரைவ் தளங்களில் கூட வாக்கெடுப்பும் தேர்தல் நடத்தும் சௌகரியத்தையும் ஸ்பார்க்லிட் போன்ற சில வலைத்தலங்கள் செய்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள், பத்துப்பாட்டில் எவை இடம் பெறுகின்றன, 'கருவறை வாசம்' எழுதியவர் யார், விஷ்ணுபுரம் புரிந்து படித்தீர்களா, படித்துப் புரிந்ததா, புரியாமலே படிக்கவில்லையா, படிக்காமல் புரியவில்லையா, 'இட்லி வடை' யார், 'தலை பத்து' கவர்ச்சி கன்னிகள் வரிசைப்படுத்தல் என்று கருத்துக் கணிப்பு நடத்தலாமா?

என்னுடைய ஒரு முயற்சி பக்கத்தில் உள்ளது! மேலும் சில ஸ்பார்க்லிட் மாதிரிகளையும் பார்த்துவிட்டு வாக்காளப் பெருமக்களின் மேலான வோட்டை வேண்டவும்.

தட்டச்சுத் திறமை


தங்களின் தட்டச்சும் திறமைய பரிசோதிக்க ஒரு வலைவிளையாட்டு. நான் ஒன்பது சுற்றில் வெற்றியடைந்து பத்தாவது சுற்றில் அனைத்து 'உயிர்களை'யும் இழந்து 84 மதிப்பெண் எடுத்தேன். நீங்க? (பாஸ் பக்கத்தில் வந்துவிட்டார் என்று அழுகுணி ஆடாமல் விளையாடுங்க).

வியாழன், மார்ச் 11, 2004

குண்டராய் பார்த்து குறைக்காவிட்டால்...

பரியின் இன்றைய பதிவில் அவசியமான சில கேள்விகளை எழுப்புகிறார்.


என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?


இந்த சட்டம் "276-139" என்னும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் இருக்கும் நூறு பேரும் தலையாட்ட வேண்டும்; கடைசியாக பெருந்தலைவர் ஜி.டபிள்யூவின் கையெழுத்தும் பாக்கி. வெகு விரைவில் சட்டமாகி விடும். மெட்டொனால்டும், பிட்ஸா ஹட்டும் போண்டியாகக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தவறான உணவு வகைகளை மொக்குவது; அனுபவித்து ருசித்த இடத்தையே குற்றஞ்சொல்லி, வழக்கு தொடுத்து உணவின் சுவைதான் என்னை சாப்பிட வைத்தது என்று விதண்டாவாதம் செய்பவர்களைத் தடுக்க ஒரு சட்டம்.

இதற்கும் நேற்று ஜாமா எனப்படும் மருத்துவர்களின் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

* தவிர்த்துவிடக் கூடிய காரணங்களால் ஏற்படும் மரணங்களில் 'உணவு கட்டுப்பாடின்மை'க்கு இரண்டாம் இடம்.
* 2000-ஆவது ஆண்டில் 400,000 பேர்கள் இவ்வாறு இறந்திருக்கிறார்கள்.
* புகை பிடிப்பது 435,000த்தைக் கொன்று இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.
* இதே மாதிரி போனால் உணவு பழக்கவழக்கங்களினால் இறப்பவர்களுக்கு 2005-இல் முதலிடம் கிடைத்துவிடும்.
* அடுத்த வருடமே 500,000-ஐ எட்டும்.
* அமெரிக்காவில் 64 விழுக்காடு மக்கள் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட அதிகம் உள்ளார்கள்.
* (நாங்கள்) 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்தியத்திற்கு செலவு செய்தோம்.
* சர்க்கரை வியாதி போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டால் $117 பில்லியன்.

மக்களுக்கு விழுப்புணர்வும் உடற்பயிற்சியை செய்ய ஊக்கததுயும் தருவதற்காக அரசாங்கமும் "ஆரோக்கியமான வாழ்க்கை" போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. சவுத்வெஸ்ட் விமான சேவை சில மாதங்களுக்கு முன் குண்டாக இருப்பவர்கள் இரு பயணிகளின் டிக்கெட்டுக்கான காசை செலுத்தவேண்டும் என்னும் புது நியமனத்தை வழிவகுத்தது. அரசும் நிறுவனங்களும் அறிவுறுத்தி என்ன பயன்?

என்னவோ.. நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒன்னுமே புரியலை உலகத்துலே.. (இட்லி வடை, பெயரிலி வரிசையில் மற்றுமொறுவர்; சாப விமோசனம் மாதிரி சுவையாக இருக்கிறது. புதுமை விரும்பும் பித்தன் மாதிரி பாதியிலேயே நிறுத்தாத வரைக்கும் சரி!?

உள்ளொன்று வைத்து?!


என்னடா பொம்மை போடறவன் புஷ் படத்தைப் போட்டிருக்கானே என்று தூற்ற வேண்டாம். உங்களுக்கு உண்மைய விளம்பவே இந்தப் படம். CTRL+A (CTRL பொத்தானை அமுத்திக் கொண்டே 'a' அல்லது Edit மெனுவில் இருந்து Select All) தட்டவும்! உண்மை விளங்கும்... புஷ்ஷின் உண்மையான முகம் விளங்கிச்சா??

நன்றி: படப்புதிர் பக்கங்கள்

வலைப்பூக்கள் நுகர்தல்

1. ஆட்டோகிரா·ப் விமர்சனத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் மீனாக்ஸ். மூன்று, நான்கு பதிவுகளை எப்படி மேய்க்கிறார், தமிழை விட ஆங்கிலப் பதிவின் மேல் அதிகப் பரிவு ஏன் என்பதை இன்னொரு நாள் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், படத்தின் குறைகளை, விகடன் போல் இவரும் கண்டுகொள்ளவில்லை. நாலு கேமிராமான் எல்லாம் சாமானியனாகிய என் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கோ படித்து, 'ஆஹா... நான்கு விதமான பதிவு கிடைக்கிறதே' என்று எல்லாம் படத்தை மறுமுறை பார்த்தபிறகும் பாராட்ட முடியவில்லை.

சேரன் என்னும் கதாசிரியர் நிறைய இடங்களில் சறுக்கியிருந்தார். நல்ல பல தமிழ்ப் படங்களில் இருந்து சுவாரசியமான பிண்ணனிகள் கடன் வாங்கப் பட்டதை விட்டு விடுகிறேன். (கடன் வாங்கியே ஓட்டும் ப்ளா·கில், அவர் 'இதய'த்தைத் தழுவினார், 'கிளிஞ்சல்கள்' சாயல், 'புது வசந்த'த்தின் தாக்கம் என்று சொன்னால், என்னுடைய காரின் டயரை நானே ப்ங்க்ச்சர் செய்தது போலாகிவிடும்). ஆனால், சேரனிடம் கேடக விரும்பும் ஒரு கேள்வி:

'ஏன் சார்... உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்களா?'

பள்ளிக் காதலி சௌகரியமாக இருக்கிறாள். 'பெப்ஸி உங்கள் சாய்ஸில்' பலர் சொல்வது போல் இல்லத்தரசி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். (மாமியார் கூட வீட்டில் மிஸ்ஸிங்). பாந்தமான கணவன். பசி, பட்டினி, ஏழ்மையில் ஒன்றும் இல்லை. ஆனாலும், கதாநாயகன் அவளைப் பல வருடங்கள் கழித்து முதன்முறையாக சந்தித்தவுடன் கேட்கிறான், 'ஏன் இப்படி கஷ்டப்படறே?'

மலையாளக் காதலி பணக்கார சமஸ்தானத்தில் வாக்கப்படுகிறாள். கணவனை வெட்டு குத்தில் இழந்து விடுவதாகக் காண்பிக்கப்படுகிறது. விதவையும் சோக உருவாக தம்பூராவை மீட்டிக் கொண்டு வெறுமனே காலம் தள்ளுவதாக சொல்லப்படுகிறது.

முறுவலரசி ஸ்னேஹாவை கிட்டத்தட்ட கன்னிகாஸ்திரியாகவே ஆக்கிவிட்டார்.

'ஏன் சார்... உங்களைக் காதலிக்க வில்லையென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்களா?'

மலையாளத்தில் மட்டுமே சம்சரிக்கும் லத்திகா, காதல் கைகூடாதபின் திருமணத்திற்குப் பிறகு தமிழில் கதைப்பது, சரஸ்வதியாக/மீராவாகத் தெளிவாக உருவகப்படுத்திய பின்பும் காணபவர்களுக்குப் புரியாதோ என்று வெளிப்படையாகக் காட்சியமைப்பது என்று ஓரிரண்டு கடுப்புகளை கண்டுக்காமல் படத்தோடு நிச்சயம் லயிக்கலாம்.

2. கருணாஸ் மட்டுமே அறிந்த தமிழ் சினிமா பார்க்கும் நல்லுலகில், கருணா குழப்பத்தை உண்டு செய்திருக்கிறார். கிழட்டு நாடோடி மூலம் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டாலும் அவருடைய சிங்கள செய்திகள் சேகரிப்பு இப்பொழுது நல்ல பயனைத் தருகிறது. சொந்தக் கருத்துக்களை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் (?!) பத்தி பிரித்தும் வெளியிட்டால் என்னுடைய குழம்பிய குட்டைத் தெளியும்.

நன்றி: Aging Wanderer's Raging Rambles

"இந்தியா எப்போதோ கருணாவினைக் கொண்டு பிளக்கத் திட்டமிட்டுவிட்டது என்பது ஒருவரின் புத்திக்கூமையைப் பகிடி பண்ணுவதுபோல. தன்னைக் கொல்ல ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள், பிரபாகரன் போரைத் தொடங்க இருந்தார் என்ற இருகூற்றுகளும் கருணா சொன்னதிலிருந்து மிகவும் (அவரவர் தேவைக்காகத்) திரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன (ரோய்ட்டர் இந்தியாவுக்குத் தலைமையகத்தினைக் கொண்டுவந்ததின் கெடுதல் இப்போதுதான் தெரிகின்றது).

பிரபாகரனா, கருணாவா என்பது எனது ஈடுபாடில்லை. இருவரிலும் பிழையும் இருக்கின்றது; இருவரும் ஈழத்தமிழர் நலனுக்கு அவசியமாகவே இருந்திருக்கின்றனர். நேற்றைக்குவரை கேர்ணல் கருணாவாக இருந்தவர் இன்றைக்குத் துரோகி கருணாவாக வன்னித்தமிழ்ப்புலிகள் சார்ந்த செய்தித்தாபனங்களிலே சொல்லப்படுவதும் உருக்காட்டப்படுவதும் நேற்றைக்கு வரை பயங்கரவாதி கருணாவாக இருந்தவர் இன்று பிரபாகரனின் கொடுங்கோன்மையை வெளிச்சொல்லும் பாதிக்கப்பட்ட கிழக்குத்தமிழர்களின் விடுதலைவீரராக இலங்கை இந்தியச்செய்தித்தாபனங்களினாலே உருவகிக்கப்படுவதும் ஈழத்தமிழன் என்றளவிலே எனக்கு ஈடுபாடானதில்லை. "

3. தமிழ்-வலைப்பூப் பிதாமகர் மாலனின் 'எது வலைப்பூ' என்னும் கடிதம் பலருடைய பதிலையும் விவாதத்தையும் தந்திருக்கிறது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று யோசிக்கலாமா என்று யோசித்தபொழுது ஷார்ப்ரீடர் மூலம் பரியின் பதிவை பார்த்த பிறகு, 'கலங்காமல் (இது செம்புலப் பெயநீர் கலங்கல்...) சொல்லியிருக்கிறார்' என்று தோன்றியது.

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி
(Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். நான்கு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், ஜெயாவின் 'சஹானா'வும் சன் டிவியின் 'அண்ணாமலை'யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ஸ்டார் விஜய்யின் 'சலன'மாய் நுழைகிறார் ரால்·ப் நாடெர்.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் 'ராமஜெயம்' என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷ¤க்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

"'The Buying of the President 2004'" என்னும் புத்தகம் இங்கே சூடாக விற்று கொண்டிருக்கிறது. திண்ணையில் நரேந்திரனின் அறிமுகத்தில் எழுதுவது போல் சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.

ஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.

ஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் கெர்ரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. 'ஸ்பெஷல்' ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறுபவர்களை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது வேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.

சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா? சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா? வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட 'ருச்சி'யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் 'ஆவிட்டா' மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.

நாடெரின் தேர்தல் அறிக்கை ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார்
செய்யப்படாத 'வயசுப் பசங்க'
வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.

ஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் 'ரெண்டாவது சாய்ஸ்' வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் '·பைனல்ஸ்' நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.

தமிழகத்தில் த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. அது போலவே தேர்தல் சீர்திருத்தங்கள் எதுவும் செய்யாவிட்டலும், நாடெர் வாக்காளர்களை திசை திருப்பினாலும், மீண்டும் ஜார்ஜ் புஷ் நான்கு வருடங்கள் வெள்ளை மாளிகையில் தொடர்வது கஷ்டமான விஷயம்தான்.

நாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனகை தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.

புஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் போன தேர்தலை வென்றார். சகுந்தலை போல் பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக ஜான் கெர்ரி குழந்தையை தத்தெடுப்பாரா?

நன்றி: தமிழோவியம்

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு