புதன், ஜூன் 29, 2005

கோவில் 1 கடத்தல் 2 காசு ?

BBC NEWS | South Asia | 'Held captive by the Tamil Tigers' ::

கோயம்பத்தூர் அருகே பதீஸ்வரர் கோவில் பேரூரில் இருக்கிறது. ஈழப் பதீஸ்வரர் கோவில் லண்டனில் இருக்கிறது.

கோவில் என்றாலே நரியை பரியாக்கிய மாணிக்கவாசகர் முதல் இன்றைய முத்தையா ஸ்தபதி வரை ஏதாவது விவகாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

(கழுகு விகடன்: "இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கோயில் வேலைகளை யாருக்குக் கொடுப்பது என்று முடிவெடுக்க வேண்டியது ஸ்தபதியின் வேலைதான். பல கோடி ரூபாய் கான்ட்ராக்ட் தொடர்பான விஷயம் அது. இந்தப் பதவியில் இருப்பவர்கள் நினைத்தால், பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட்களை எடுத்துக்கொண்டு கொழிக்கலாம்.")

சுனாமி நிதி தருவதற்காக இலங்கைப் பக்கம் சென்ற ராசிங்கம் ஜெயதேவனை விடுதலைப் புலிகள் பிணைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள்.

எல்.டி.டி.ஈ. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

விவேகானந்தனும் ஜெயதேவனுடன் கூட சென்றிருக்கிறார். லண்டன் வாழ் தமிழர்களிடம் சுனாமி நிதி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்காக இருவரும் புலிகளைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.

சிவயோகம் டிரஸ்ட்டுக்கு லண்டன் வெம்ப்ளி கோவிலை எழுதி கொடுப்பதற்காக 42 நாள் கழித்து விவேகானந்தன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திரைப்படத்தில் பிணைக்கைதியை பிடித்து வைத்திருப்பது போல், கையெழுத்தாவதற்காக, மேலும் இருபது நாள்களுக்கு ஜெயதேவன் சிறையில் இருந்திருக்கிறார்.

கோவிலை அடிப்படையாகக் கொண்டு பணம் திரட்டுவதே இந்தக் கடத்தலின் நோக்கமாக ஜெயதேவன் நினைக்கிறார். கோவிலை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இங்கிலாந்தின் இன்ன பிற தமிழ் அமைப்புகளையும் அடைவதே குறிக்கோளாக இருந்திருக்கும் என சொல்லியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு பணம் போவதாக சொல்வதை சிவயோகம் ட்ரஸ்ட்டை நடத்தும் என். சீவரத்தினம் மறுத்திருக்கிறார். தான் புலிகளின் ஆதரவாளராக இருந்தபோதும் நிதி விநியோகத்தை வெளிப்படையாக நடத்துவாக சொல்லியிருக்கிறார். திரட்டப்படும் நிதி அனைத்தும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் மட்டுமே செல்வதாக குறிப்பிடுகிறார்.

ஆளுங்கட்சியின் தலையீட்டினாலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் கோவில் மீண்டும் பழைய நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எவ்வளவு பணம் கைமாறியது, 2001-இல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்த கடத்தலில் சம்பந்தமிருக்கிறதா, ஜெயதேவனை பிணைக்கைதியாக வைத்தது யார் என்பதை ஸ்காட்லாண்ட் யார்ட் விசாரிக்காவிட்டாலும், உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு