செவ்வாய், ஜூன் 07, 2005

ரோஜா

காதல் ரோஜாவே
எங்கே
நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே

கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ
ஏதானதோ
சொல்


தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளியோடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகமிரண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா?
சொல்!



வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ

பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை
ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை
தீர்ந்து போ

பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ

பாவையில்லை
பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்பே
சேவையென்ன சேவை?

2 கருத்துகள்:

//வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ?//


வேலையில்லை இன்று போ! என்பதே சரி :-)

அப்படியிருக்குமோ என்று யோசித்தேன் :-) அப்புறம் இது சரியான 'வேளை'யில்லை. நல்ல டைமா பார்த்து வா என்று சொல்கிறாரோ என நினைத்து மாற்றியிருந்தேன்.

நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு