செவ்வாய், ஏப்ரல் 20, 2004

விமர்சகரும் வாசகரும்

பிகேஎஸ் என்ன சொல்ல வருகிறார் என்று நினைக்கிறீர்கள்?
1. பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.
2. சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள்.
3. படைப்புகளைப் பாராட்டுபவர்கள் நார்ஸிஸ மனப்பாங்குடையவர்கள்.
4. வாசகரின் அறிவும் திறனும் படைப்புகளை விட குறைந்து இருந்தால்தான் ரசிக்க முடியும்.
5. விமர்சனங்களால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்காது.
6. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்க வேண்டும். (ஆனால் எழுத்தாளருக்கு அறிமுகமாகியிருக்கக் கூடாது; படைப்பையும் பாராட்டக் கூடாது).
7. தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்கள்.
8. விமர்சனம் என்கிற பெயரில் எழுதாமல், வாசக அனுபவங்கள் என்று தலைப்பிடவும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு