புதன், ஏப்ரல் 21, 2004

விகடன் புக் கிளப்!

ஆனந்த விகடன்.காம்:

ஆதவன் தீட்சண்யாவின் ‘பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம்’ கவிதைத் தொகுப்புக்கு, கோவை தேவமகன் நினைவுப் பரிசும், ‘கவித்தூவி’ விருதும் கிடைத்துள்ளன.

எழுத்தாளர் கோணங்கி ‘பாழி’ நாவலைத் தொடர்ந்து ‘பிதுரா’ என்ற நாவலை எழுதி முடித்திருக்கிறார். இரண்டு யாத்ரீகர்களைச் சுற்றி வருகிற கதையாம்!

எழுத்தாளர் இந்திராவின் ‘சித்திரக்கூடு’ நாவலைத் தொடர்ந்து, அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ஒற்றை வாசனை’ வெளியாகவுள்ளது.

பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் வரப்போகிறது.

பாடலாசிரியர் கபிலனின் ‘நகர்பறை’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகிறது.

பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு