செவ்வாய், ஏப்ரல் 27, 2004

அண்ணாச்சி(அமர)காவியம் - குரோம்பேட்டைக் கவிராயர்

Jeeva Jyothiமரபிலக்கியம்:

இட்லி சாம்பாரும் இடியாப்பக் குருமாவும்
லட்டுமிட்டாயும் விற்றிருந்தான் - கெட்ட
சனிதசை கண்டு சகவாசம் பலகொண்டு
இனிமீளா இடம் ஏகினான்.

0
குலவிளக்காய் ஒருமனைவி குடிகெடுக்க அன்றே
அளவெடுத்து வேறொருத்தி நீகொணர்ந்தாய் - விலைகொடுத்து
வேறொன்றும் வாங்க விதியுன்னைத் துரத்தியதால்
பார், இன்று பரதேசிநீ!

Thatstamil செய்திகள்: நேற்று ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இன்று 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு