ஞாயிறு, மே 23, 2004

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (11)

திருக்குறள் கதைகள் - 1,2,3,4: முதல் பாகம் 1981-இல் வெளிவந்தது. அடுத்த மூன்று பாகங்களும் வானதியின் புதல்வர் திரு. ராமநாதன் ஊக்கப்படுத்த எழுதியதே 2000வது ஆண்டில்தான். ஒரே சமயத்தில் வெளிவந்த இவை தேனோடு தரப்பட்ட ஔடதம்.

மூதுரைக் கதைகள்: மூதுரைச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் சொல்வதோடு கதைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளையும் பெரியோர்களையும் சுவாரசியப்படுத்த இடை இடையே கவிதைகளும், புதிர்களும் கூட உண்டு.

மகாபாரதக் கதைகள் - 1,2,3,4 பாகங்கள்: வானதி திருநாவுக்கரசு அவரளின் மூத்த புதல்வர் திரு. சோமு அவர்கள் மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சியும் விடாமல், அதிகமாக நீட்டாமல், அதிகமாக வர்ணிக்காமல் சிறுவர்களுக்கான கதைகளாகக் கொடுக்க முடியுமா என்னும் வேண்டுகோளை ஏற்று வெளிவந்த நூல்கள் இவை. இன்னும் பல பதிப்புகளையும், இன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் நூல்கள் இவை. கம்பர், வால்மீகி, வில்லிபாரதம் என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, யுத்த காண்டத்தையும் ரத்த களறி இல்லாமல் வெகு நளினமாக எடுத்து செல்லும் புத்தகம்.

மரியாதை ராமன் கதைகள்: திருவரசு வெளியீடு - இருபது கதைகள் கொண்டது. 1998இல் வெளிவந்தது. எளிய தமிழில் தோண்டி எடுக்கப்பட்ட புதையல் இது. 'குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை பற்றி அம்மா சொல்வார்கள். திறமை அதிகம். விளம்பரத்தைப் புறக்கணித்த மனிதர் என்று. என் தாயும் அப்படித்தான். 'யானைக்குப் பானை சரி' கதையைப் படித்தபோது இதை உணர்ந்தேன்.

(சிறு குறிப்பு வளரும்)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு