செவ்வாய், ஜனவரி 20, 2004

சன் டிவி - 2

நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் நிறையப் படிக்க வேண்டும்
என்பது பல நல்ல எழுத்தாளர்களின் அறிவுரை. ஒரு தேர்ந்த செவ்வி
எப்படி எடுப்பது, எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும் இது பொருந்தும்
என்றே தோன்றுகிறது.

யேசுதாஸையும் தேனிசைத் தென்றலையும் பேட்டி கண்டவர்கள் இதை
தெளிவித்தார்கள். யேசுதாஸ் பேட்டியில் யேசுதாசும், தேவாவின் பேட்டியில்
'பெப்ஸி' உமாவும் நிறையப் பேசினார்கள். 'கமகம்' என்றால் என்ன என்று
பலரிடம் கேட்டு, பதில் தெரியாத பாமரன் எனக்கும் புரியும்படி பதில்
சொன்னார் யேசுதாஸ்.

கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தில் இருந்து கேட்கும் சம்பிரதாயக்
கேள்விக்கு, ர·பி போன்றவர்கள் சாஸ்திரீய சங்கீதம் ஒன்றும் தெரியாமல்
கலக்கியதை சொல்லி, 'அவரவர்க்கு அதது' என்று படு non-controversial-ஆக
சொல்லி வந்தவர், 'தெருக்கோயில்' குறித்து கிண்டல் செய்தவர்கள் இன்று
எல்லாவற்றையும் 'பருவாயில்ல' என்று விட்டுவிட்டுப் போவதை
காட்டமாக எதிர்த்தார்.

'கலைஞனுக்கு சவால் தேவை; பணத்திற்கு மட்டும்தான் என்றால் என்னைப் போல்
செல்வம் சேர்ந்த பிறகு அதிகம் பங்கெடுக்க மாட்டார்கள்' என்று அமெரிக்காவுக்கு
சென்றுவிட்டதை தொட்டார். ஒரு திரையிசை ரசிகனுக்கு கர்னாடாக
இசையின் முக்கியத்துவத்தையும், தன்னடக்கத்தின் பிரதிநித்துவமாகவும்
விளங்கிய அதிக விளம்பரதாரர் இல்லாத பேட்டி.

எல்லா விளம்பரதாரர்களும் திரைப்படங்களிலேயே தோன்றினார்கள்.
தூர்தர்ஷனில் 'மலரும் நினைவுகள்' அதிகம் பார்க்கப் படும் நிகழ்ச்சியாக
இருந்தது. அது போல் இப்பொழுது இல்லை போல!?

'பெப்ஸி' உமாவின் பதில்கள் தாங்கிய பெரிய கேள்விகளுக்கு சிறிய
பாட்டாக பதி சொன்னார் தேவா. 'ஆம்/இல்லை' அல்லது 'ஒரு வார்த்தைக்கு
மிகாமல் பதில் சொல்லவும்' என்று அறிவுறுத்தி விட்டாரோ என்னவோ...
ரொம்ப ஏமாற்றிய பேட்டி.

'கோயில்' படத்தின் இருபது நிமிட சிறப்பு நிகழ்ச்சியில், இந்தப் படம் மிக
எதார்த்தமானது என்பதை சிம்பு, ஹரி, நாசர் (?!), சிம்பு, ஹரி, சிம்பு, நாசர், ...
இருபத்தி மூணு முறை சொன்னார்கள். மிக எதார்த்தமான சண்டைக்
காட்சிகள் நிறைந்த படம் என்பதைத் தொடர்ந்து உருட்டைக் கட்டைகளுடன்
வரும் இருபது வில்லன்களை வெறும் கையாலேயே சிம்பு புரட்டி எடுத்தார்.

'பட்டிக்காடா... பட்டணமா?' என்று கங்கை அமரன் 'ஓ' நிறைய போட்ட நிகழ்ச்சியில்
புஷ்பவனம் கந்தசாமியின் பாடல்களைத் தவிரக் குறிப்பிடத்தக்கதாக ஏதுமில்லை.
'மன்மத ராசா', 'திம்ஸ¤ கட்ட'ப் பாட வைக்க வேறு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கலாம்.

'அனைத்து அமெரிக்க அமோகா ரசிகர் மன்ற'த்தைப் பதிவு செய்யும் எண்ணத்தை
ஸ்னேஹா மீண்டும் மாற்றி அமைத்தார். மைக்ரோசா·ப்ட் இயங்குதளத்தில் பரவும்
'ப்ளாஸ்டர்' போல் அவருடைய வாயில் இருந்து எதார்த்தமான சிந்தனைகள்
விழுந்தன. புடைவை கட்டுதலே கவர்ச்சிக்குத்தானே, கிளாமருக்கும் கவர்ச்சிக்கும்
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை, படமில்லாவிட்டால் கூட 'கமல் பட ஹீரோயின்'
மாதிரி நடிக்க மாட்டேன் (விரும்புகிறேன் ஒரு aberration) என்று அபிநயத்தோடுப்
பேசிக் கொண்டே சென்றார்.

'மக்களை கவனிப்பது பிடிக்கும். அவர்களின் விஷயங்களைத் தெரிவதில் ஆர்வம்;'
எனவே, உளவியல் படிப்பதில் விருப்பம் என்று சொன்னது புருவத்தை உயர்த்தியது.
இந்தக் குணம் பெண்கள் பலருக்கு பொதுவல்லவா? அடுத்த வீட்டு வம்பு கேட்பது,
பொதுப் பிரசினைகளைத் தீர்ப்பு வைப்பது என்பது கதை எழுத வைக்கலாம், சிறந்த
'மாத்ருபூதமா'க்குமா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு