ஞாயிறு, ஜனவரி 18, 2004

கதை விட வாங்க - 2

Aa Mathavaiah: "அவரது பாத்திர உருவாக்கம், கதை நிகழும் களம் மற்றும் உரையாடல்களில் கூர்மையான விமரிசன நோக்கு வெளிப் படுகிறது. அக்காலத்துக்குரிய அரிய சிந்தனைகளையும் தனது படைப்புகளில் ஆங்காங்கு பதித்து விடுவார்.

பத்மாவதி சரித்திரம் நாவலில் ''மதம் மாறுவது தானா, சமூக வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டு களுக்கு மருந்து? மதம் என்ன ஒரு கோட்டா, தொப்பியா கிலுக்கினால் மாற்றிட? அவரவர் நாகரிகத்துக்கும், பயிற்சிக்கும் அங்கீகார மாயிருப்பது மதம் தானே? மதம் சம்பந்த மில்லாத விஷயங்களையும் மதம், மதம் என்று பாராட்டி அபிமானிப்பதால் தான் இப்படிப்பட்ட தர்மசங்கடங்களும் விபரீதங் களும் ஏற்படுகின்றன. அதைச் சீர்திருத்த வேண்டுமே அல்லது, மதம் மாறுவதெப்படி? மதம் அவரவரைப் பொறுத்தது என்று நமக்குள்ளும் ஆக வேண்டும். அதற்கு வேண்டிய முயற்சி செய்ய வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.

'குசிகர் குட்டிக் கதைக'ளில் ஒன்றான 'திரெளபதி கனவு' என்ற கதையை மாதவையா ஒரு சுயசரிதை வடிவில் எழுதியிருக்கிறார். "

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு