வெள்ளி, ஏப்ரல் 30, 2004

'பேரழகன்' - காதலுக்கு

புஷ்பவனம் குப்புசாமி பாடும் 'பறை' பீட் பாடல். நடுவில் 'குனித்த புருவமும்' ஷோபனா போல் பாசுரமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சுத்துகிற பூமியில எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி எங்களக் காக்க வேணுமடா
கூடிநிற்கும் சனங்க எல்லாம் கோஷம் போடுங்கடா
கஞ்சி கேக்கும் வயித்துக்காக காசு போடுங்கடா

காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி
காம்பவுண்டு சுவருல உன்ன ஒட்டப் போறேன் பாரடி
கண்ணகியின் சிற்பம் ஒண்ணு செத்துப்போச்சு சென்னையில
அந்தச் சில உசிரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டுவச்ச பல்லுடா
கத்திமுனையில் ஏறி நிற்கும் தில்லுடா
பத்துவிரலும் அர்ச்சுனரு வில்லுடா
என்னப் போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமரத் தோப்புக்குள்ள வாழமரம் நீயடி
முக அழகப் பாத்து மயங்கிப்புட்டேன் நானடி


யுவன ஷங்கர் ராஜாவின் முழுப் பாடலையும் கேட்க ராகா செல்லலாம்.

'பேரழகன்' பாடல் குறித்த முந்தைய பதிவு.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு