சனி, டிசம்பர் 20, 2003

அன்னை தெரசாக்களுக்கு பதிலாக சமுதாயத் தொழிலாக்கர்கள்

How to Save the World? Treat It Like a Business: ஒழுங்காக படிப்பதில்லையா? +2வில் நல்ல மதிப்பெண்கள் இல்லையா? சோத்துக்கு கஷ்டமா? கவலை வேண்டாம். தமிழ்ப் படங்களின் ஹீரோ - ஹீரோயின் வித்தியாசத்தை (ஏழை - பணக்கார பொருளாதார பாகுபாடுங்க) நீக்க திரு. ஸ்க்ராம் இவர்களை பயன்படுத்துகிறார்.

பட்டம் பெற்று வேலையில் அமர்ந்தவர், முன்னூறாயிரம் டாலர்களை வரியாக அரசுக்கு தன்னுடைய வாழ்நாளில் கிஸ்தி கொடுக்கிறார். பணபுழக்கத்தை அதிகரிக்கிறார். ஒரு பெண்ணை படிக்க வைப்பது குடும்பத்துக்கே விளக்கேற்றுவது போல ஒருவரை கல்லூரிக்கு அனுப்புவதால், அந்தக் குடும்பங்களில் தறுதலைகள் தவிர்க்கப் படுகிறார்கள்.

பங்களாதேஷ் கிராமீன் வங்கியின் புகழ்பெற்ற 'மைக்ரோ க்ரெடிட்', அமெரிக்காவின் சிறந்த பல்கலைகளில் இருந்து இளம் பட்டதாரிகளைக் கொண்டு இல்லாதவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது, உலகளவில் அனைத்து ஏழ்மையானவர்களுக்குமான உடல் நல பாலிசி, பிரேசிலில் வறுமையில் இருக்கும் விவசாயிகளுக்கு சகாய விலையில் மின்சாரம் வழங்கும் செயல் திட்டம் என பல தொண்டு தொழிலதிபர்கள்.

சமுதாயத் தொழிலாக்கர்கள் (entrepreneurs) சேவை மனப்பான்மையோடு பணம் பண்ணும் எண்ணமும் கொண்டவர்கள். நாட்டுக்கும் நாலு காசு வரவிட்டு, தனக்கும் ஒரு காசு பார்த்துக் கொண்டு, அடுத்தவரிடம் கையேந்தாமல், குடிசைகளை முன்னேற்றுகிறார்கள்.

தற்போது மக்களுக்கு சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், ஏழைகள் இன்னும் நசுக்கப்படுதல், சுகாதார விபத்துகள், மனித உரிமை மீறல், வன்முறை அதிகரிப்பு, கல்வி திட்டங்களின் சீர்கேடு, என்று பரந்த ஞானம் இருக்கிறது. அவற்றை மாற்ற நேரமும், பணமும், உடல்நலமும், வெளி அறிவும், பார்வைகளும், சமூக அமைப்பும், சுதந்திரமும், நம்பிக்கையும் வாய்த்திருக்கிறது.

ஸ்டான்போர்ட், ட்யூக், யேல் என பல நல்ல கல்லூரிகள் புதிய பாடதிட்டமான சமூக தொழிலாக்கத்தை வழங்குகிறார்கள். கொஞ்சம் சரித்திர பிண்ணனி, மில்லியன் என்.ஜி.ஓ. தொண்டு ஆரவலர்கள் நிறைந்த இந்தியா, என விரியும் கட்டுரை, அரசாங்கத்தின் பங்கை சொல்லி முடிக்கிறது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு