சனி, டிசம்பர் 27, 2003

நான் செத்துப் பிழைச்சவண்டா

siliconindia: பிதாமகனுக்கு டிமிக்கி: நான் அடித்துப் போட்டது போல் தூங்கும் ஜாதி. ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது, 'கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்கு' என்று சொல்லி சென்றார்கள். வீட்டுக்குள் மீண்டும் நுழைய கொல்லைப் புறம் வழியாக, சொந்த வீட்டிலேயே ஏறி குதித்து, உள் நுழைய வேண்டியிருந்தது. அவர்கள் வந்து ரொம்ப நேரம் கழித்து எழுந்த எனக்கு, 'திருடன் வந்தது கூடத் தெரியாம தூங்குகிறாயே' என்று திட்டு வாங்கினது வேறு விஷயம்.

இந்த ஹிமாசல பிரதேச ஆளும் நம்ம கதை மாதிரிதான். எழுபத்தொரு வயசு. இறந்து விட்டார் என்று ஊர்ஜிதப் படுத்தி, பாடையிலும் ஏற்றியாகி விட்டது. மயானத்துகு செல்வதற்கு முன் எகிறி குதிக்கிறார். நம்ம ஊரு கார்த்திக் போல் சித்ரகுப்தனை பார்த்தேன், சொர்க்கத்தின் வாயிலில் நின்றேன் என்று எல்லாம் பூச்சுற்றாமல், 'க்யோன் இத்னி லோஃக்?' என்று பொக்கை வாயில் ஆச்சரியப் படுகிறார்.

கட்டையில் வைத்து கட்டும்போது கூட எப்படி எழுந்திருக்க வில்லை என்பதும், 'மென் இன் ப்ளாக்'கில் வரும் அதிசய உபகரணத்தாலோ, எமதர்மராஜனின் மந்திரத்தாலோ, எப்படி ஒன்றுமே நினைவில் இல்லை என்பது நம்முடைய ஆச்சரியங்கள்.

ரொம்பக் குழம்பாமல் பாராவின் அலகில்லா விளையாட்டு படித்தாலும் இந்த இறப்பிற்கு பின் தத்துவங்களை விளக்கிக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு