திங்கள், டிசம்பர் 29, 2003

மின் அரட்டைகளும் மின்னல் வேக கணிப்புகளும்

காசி குறிப்பிடும் ந(ண்)பர் யாராக இருக்குமோ என்று மண்டை குடைய வேண்டாம். நான்தேன்! வக்கணையாக பதில் சொல்ல ஆசைதான். அவரவர் perception-படி விஷயங்கள் அனுமாணிக்கப் படுகிறது.

பாராவின் 'மெல்லினம்' அசை போட கொடுக்கும் சில வரிகள்:

நிர்மலாவுக்குக் குழப்பமாக இருந்தது. ரொம்ப சாமர்த்தியமாக ஒரு புகாரை, புகார் தொனியில் அல்லாமல் நட்புணர்வுடன் செய்தி அறிக்கை போல் வாசித்து விட்டுப் போயிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், புகார் புகார் தான். எந்தத் தொனியில் சொல்லப்பட்டால் என்ன?

பாராவின் அலகில்லா விளையாட்டு' உபயம்:

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.

* கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.

* ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு