வியாழன், டிசம்பர் 04, 2003


Tuesday, August 19, 2003





அனு மாலிக்-களும் ப்ரியதர்ஷன்-களும்

'விசில்' படத்தில் ஒரு பாடல் வரும்.

'திருடி திருடி சுட்ட பழம்' 'வருடி வருடி சுடாத பழம்டா'
'தடவி தடவி சுட்ட பழம்' 'தழுவி தழுவி சுடாத பழம்டா'

விசில் படம் 'Urban Legend'-இன் FDA சான்றிதழ்
கிடைக்கக்கூடிய 100 சதவிகித மொழி மாற்றம். ஆங்காங்கே "Scream", "I Know What You Did Last Summer"-உம் சிறிய அளவில் கலந்திருப்பார்கள்.

'கற்றது பெற்றதில்' ப்ரமோசன் கொடுக்கையில்,
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 'ராசநாராயண்' கதை என்று வக்காலத்து வாங்க மட்டும் வசனகர்த்தா தவறவில்லை.

கமல் அளவு வேணாம். வெளிநாட்டு சரக்கை, லோக்கல் நாக்குக்கு கலந்து கொடுக்க
கமலின் ஒரு துளியை அடைவதற்காகவாவது, அவரிடம் க்ளாஸ் கேக்க வேண்டும்.


Posted by Bala Subra on 04:43 PM







---------------------------------------------


Monday, August 04, 2003





பொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது?

தேசிய பொருளியல் ஆய்வு மையம் ஒரு சுவாரசியமான ஆனால் பயனில்லாத தகவலை
வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார சரிவு நவம்பர் 2001-இல் முடிந்து
விட்டது என்கிறார்கள். விரிவான செய்தியை ஹ¥வர்ஸில் படிக்கலாம்.

எனக்குத் தெரிந்து கணினி தெரிந்த இந்தியர்களுக்கு இன்னும் எளிதில் மாற்று
வேலை கிடைப்பதில்லை. ஜாவா தெரிந்தவர்களும், கற்கால மெயின்·ப்ரேம்
வித்தகர்களும், பச்சை அட்டை இருந்தாலும் இரு வருட காலமாகத் ததிங்கிணத்தோம்
போட்டுக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஹெச்-1 பி மக்கள் நிலையோ இன்னும்
கொடுமை.

நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குப் பஞ்சப்படி, கசையடி பெறாமல் கம்பெனி மாறுதல்
என சில சௌகரியங்கள் இருக்கிறது. விசா மக்களுக்கோ ஓரிரு வாரங்கள் மட்டுமே,
வேலை போனபிறகு ஊர் சுற்ற அனுமதி. அதற்குள் தங்கள் உடமைகளை பொட்டலம்
கட்டிக்கொண்டு கூடுவாஞ்சேரியோ, கீழக்கரையோ வந்து சேர வேண்டியதுதான்.

ராஜ்ஜியத்தில் மும்மாரி பெய்யாவிட்டாலும், அரசர் சரியில்லை என்று சொல்லும் நம்ம
ஊர் பழக்கம் அமெரிக்காவிலும் நிறைய உண்டு. வீட்டில் உட்கார்ந்து தண்ட சோறு
சாப்பிடுபவர்களின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளிலேயே இல்லாத அளவு மிக
அதிகமாக ஆறரை விழுக்காட்டில் இருப்பதற்கும், அதிபர் ஜார்ஜ் புஷ்தான் காரணம்
என்கிறார்கள் எதிர்கட்சிகள்.

'எனது நீதிபதிகள் மக்களே' என்ற புஷ், புதிய திட்டம் தீட்டுவதில் புத்தியை
செலவழிக்காமல், அவர்களை அடுக்கு மாடி அங்காடிகளுக்கு சென்று செலவழிக்க
சொல்கிறார். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா நானூறு வெள்ளிகளுக்கு
காசோலை அனுப்பி வைக்கப் போகிறார்கள் புஷ்ஷின் அரசாங்கம். ஏதோ அவசரத்துக்கு
கைமாத்துப் பணமாவது கொடுக்கிறானே என்று அடுத்த வருடம் வரை ஞாபகத்தில்
வைத்திருந்து யானை சின்னத்தில் குத்துவார்களா?


Posted by Bala Subra on 03:48 PM









தமிழும் எளிமையும்

"ஹிந்திக்கு எதிராக எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அது எளிமையாக இருக்க வேண்டும்!
என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கே சில சமயம் விளங்குவதில்லை"
-வாஜ்பாய்

நன்றி: இந்தியா டுடே


Posted by Bala Subra on 02:40 PM







---------------------------------------------


Thursday, July 31, 2003





சொந்தக் கதை சோகக் கதை

என்ன்னுடைய கம்பெனிக்கு நேரம் சரியில்லை. எல்லாம் ஜுபிடர் பெயர்ச்சியினால்தான்
என்று நினைக்கிறேன். மூன்று மடங்கு அதிகம் காசு கேட்பவன் பக்கம்
நியாயம் இருக்கிறதா என்று தீர ஆராயுமாறு நீதிமன்றம் சொல்லி விட்டது!

இந்த ஏலக்குத்தகை குறித்த நிகழ்வுகளைக் காணும் போதெல்லம், ஏனோ Mr. பாரத் படம்
நினைவுக்கு வந்து செல்கிறது. எது எப்படியோ அம்பிகாவுக்கு வேறு வேலையாவது கிடைத்து
இருந்தது. எனக்கும் ஒரு சுபமான தீர்ப்பு, அடுத்த குருப் பெயர்வுக்குள்ளாவது தெரிய வேண்டும்.


Posted by Bala Subra on 03:43 PM







---------------------------------------------


Thursday, July 24, 2003





பொய் சொன்ன வாய்க்கு (மட்டுமே) போஜனம்

தருண் தேஜ்பால் ஒரு உருக்கமான மின்மடல்
அனுப்பி இருந்தார். டெஹல்காவின் சோகக்கதையை
சுருக்கமாக சொல்லி, சந்தாதாரர் ஆகுமாறு இறைஞ்சி
இருந்தார். சீக்கிரமே ஒரு வாரயிறுதி செய்தித்தாள்
ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்பித்த ஒரு வருடத்துக்குள் ராணுவ பேர அம்பலம். அங்கு ஆரம்பித்தது
சனிப் பெய்ர்ச்சி. தலித்துகளின் எதிரி; அர்ஜுன் சிங் உறவினர்; காங்கிரஸ்
ஆதரவாளர்; விபச்சாரத்துக்கு துணை போகிறவர்கள் என குற்றம் சாட்டிய
எதிரணி சுறுசுறுப்பான 120 பேரை மூன்றாக குறைத்திருக்கிறார்கள்.

மீரா நாயர், ஷாருக், சோபா டே, என பல பிரபலங்களை ஆதரவு கொடுக்க
வைத்து அக்டோபரில் பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள். ராம் ஜெத்மலானி,
நய்பால், கபில் சிபல், ஷ்யாம் பெனகல் என்று சிந்தனையாளர்களை அடக்கி
ஒரு ஆலோசகர் குழுவையும் அமைத்து இருக்கிறார்கள்.

('நேட்சர் பவர்' விளம்பரத்தின் உதவியுடன்)
'நல்ல விஷயங்கள் அதிகம் இருந்தால் ஆதரிக்கத்தானே வேண்டும்'?

அடி குறிப்பு:
தமிழில் ஒரு பழமொழி உண்டு:
'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது!'

தமிழின் அனைத்து பழமொழிகளையும் பழுது பார்த்து, புது யுகத்திற்கு ஏற்ப
செப்பனிட வேண்டும்.



Posted by Bala Subra on 05:52 PM







---------------------------------------------


Wednesday, July 23, 2003






ஐந்து வயதிலும் ஆசை வரும்


நான் பள்ளியில் பயாலஜி படிக்காதவன். ஆனால், அப்பொழுதே மாணவர்களுக்குக்
கலவிக் கல்வி பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அறைகூவலிட்டுக்
கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள், ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு,
பாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக
பசங்களுக்குக் கற்று கொடுத்தாலே போதும் என்கிறார்கள்.

ஒரு குழந்தை கூச்சப் பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ இருந்தால்
தவறான தகவல்களை கற்றுக் கொள்ளும். அதற்காக, பெரியவங்க விஷயத்தை
புட்டுப் புட்டு வைத்து விட்டால், களங்கமில்லாத இள வயதை இழக்க நேரிடும்.
பெற்றோரே குழந்தைகளோடு நெருக்கமான, சுதந்திரமான உறவை வைத்துக்
கொண்டாலும் இந்த சந்தேகங்களை கேட்டுத் தெளிவார்களா?

ஒரு பெண் 'எந்த கான்டம் எப்படி உபயோகிப்பது' என்று தன்னுடைய தந்தையிடம்
கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்? இருக்க வேண்டும்?
வயசுக்கு வருவது, குழந்தை எப்படி பிறக்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும்!?

நன்றி: பிபிசி




Posted by Bala Subra on 03:59 PM







---------------------------------------------


Tuesday, July 22, 2003






இவ்வாறு சொன்னால்?
longitude - நில நிரைக்கோடு

Posted by Bala Subra on 06:01 PM









பிரான்சில் ஈ-மெயிலுக்குத் தடா

·பிரென்ச் அரசாங்கம் 'E-Mail' என்னும் வார்த்தையை உபயோகிக்கத்
தடை செய்துள்ளது. ஏற்கனவே 'வாக்மேன்' நீக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலும் இவ்வாறு பலமுறை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருக்கும் பலகைகளைத் தமிழ்படுத்துவது;
ரயில் நிலையங்களில் கரி பூசுவது என்று...

பிரான்ஸ் செய்வதால் தமிழர்கள் செய்தார்களா?
தமிழரைப் பார்த்து ·பிரான்ஸ் செய்கிறதா?

('கொடி அசைந்ததும் மெட்டில் படிக்கலாம்')

நன்றி: சிலிகான்.காம்



Posted by Bala Subra on 05:51 PM











தமிழ் எழுத்துரு வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.
உதவி பக்கத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்?



Posted by Bala Subra on 05:39 PM









வணக்கம்

Posted by Bala Subra on 03:55 PM






0 கருத்துகள்:

புதிய இடுகை முகப்பு