வெள்ளி, ஜனவரி 16, 2004

தமிழ் உலகம் வழங்கும் சங்கமம்

இ-சங்கமம்:
பொங்கல் முதல் மலர்ந்துள்ள ஒரு புதிய வலைத் தளம்.

என்னினிய தமிழர்களுக்கு என தனது தலையங்கத்தைத் தொடங்கியுள்ளார் ஆல்பர்ட். தமிழர்களின் கலை, கலாசாரம், மரபு சேவையைப் பிரதானப்படுத்த இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இ-சங்கமம் தொடங்கப்பட்டுள்ளதாக தமது தலையங்கத்தில் விளக்கியுள்ளார் ஆல்பர்ட்.

பொங்கல் சிறப்பு மலராக முதல் இதழ் மலர்ந்துள்ளதால், பொங்கல் பற்றிய கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் புகாரியின் கவிதையுடன், நண்பர்கள் இளங்கோவன், வாசன், ஐயா ஞானவெட்டியான் ஆகியோரின் கட்டுரைகளும் பொங்கலின் சிறப்பைக் கூறுகின்றன. கவிதைகள் பிரிவில் சகோதரிகள் புதியமாதவி, புஷ்பா கிறிஸ்ட்டியின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இணையத்தில்
நகைச்சுவைக்கு என தனி முத்திரையைப் பதித்துள்ள அன்பர் சுவாமிநாதன் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமா? நட்டம் என்ற அவரின் கதை ஒன்றுடன் அவரின் படமும் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப் பாறைக்கு என்னவாயிற்று? அத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார்? சிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி, கணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை
இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

தமிழ்-உலகம்: பழனி




0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு