திங்கள், பிப்ரவரி 23, 2004

மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா....

சில நாட்கள் முன்பு பிபிசியின் இந்த நாள் பகுதியில் லுமும்பா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்திருந்தார்கள். இவரை குறித்து எனக்கு முதலில் அறிமுகம் செய்தவர் கணேஷ். ராகாகி-யில் அவர் எழுதியதில் இருந்து:


காங்கோ நாட்டின் முதல் பிரதமர் "லூமும்பா".... சுருக்கமாகச் சொல்வதானால் காங்கோ நாட்டு காந்தி...

Patrice Lumumbaதனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்.....ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் "மொபுட்டு" வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்.... ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்... அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்.....சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் "மொபுட்டு" லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது........

படம் பாருங்கள்.. நமக்கு பரிச்சயமில்லாத, பழக்கமில்லாத ஓரு நாட்டின் தலைவன்....இருந்தாலும் படம் பார்த்தபின் லூமும்பா நம் மனதை தொட்டுச் செல்வது உறுதி... அதுவே இந்த படத்தின் படைப்பாளிகளின் வெற்றியும்.........

படம் பிரெஞ்ச் மொழியில், ஆங்கில sub titles......


பிபிசி செய்தித்தளம் மேலும் தகவல்களைக் கொடுக்கிறது.

(அமெரிக்காவில் எந்த ஊடகமாவது இதே போல் 'ஹைதி' குறித்து பாரபட்சமற்ற அலசல்களைக் கொடுக்கிறதா?):

* கசாய் மாகாணத்தில் ஆயிரம் பேரை கொன்று குவித்ததாக லுமும்பாவின் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.

* நான்கு மாதமே அரியணையில் இருந்த பிறகு, கம்யூனிச சிந்தனைகளால் ராணுவத்தின் ஆதரவை இழக்கிறார்.

* புதிய ஜனாதிபதி மொய்ஸே ஷோம்பெ "இது எங்களுடைய பிரச்சினை; மற்றவர்கள் தலையிட வேண்டாம்" என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க முயற்சித்ததை (இந்தியா காஷ்மீர் விவகரத்தைத் தடுப்பது போல்) தடுத்து விடுகிறார்.

காலம்நிகழ்வு
ஜூன் 1960லுமும்பா பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அக்டோபர் 1960பதவி பறிக்கப் படுகிறது
டிசம்பர் 1960லுமும்பா கைதாகிறார்.
18 ஜனவரி 1961லுமும்பா மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் encounter முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
செப்டம்பர் 1961புதிய ஜனாதிபது கசுவுபூ ்கர்னல் சோசப் மொபுட்டுவை ஆட்சியிழக்க வைக்கிறார்.
நவம்பர் 2001அமெரிக்கா மற்றும் பெல்ஜியாவுக்குத் தெரியாமல் லுமும்பா கொலை அரங்கேறியிருக்காது என்னும் பெல்ஜியாவின் அறிக்கை வெளியாகிறது.்
பிப்ரவரி 2002பெல்ஜியா தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது. சுதந்திரத்தை நிலைநாட்ட கொங்கோவுக்கு மூன்று மில்லியன் நிதி அள்ளித் தருகிறது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு