செவ்வாய், மார்ச் 02, 2004

அகக் குரலும் புறச்சூழலும்

திசைகள் - அரும்பு சொல்வெளி:
அனைத்துலகப் பெண்கள் தினத்தன்று முற்றிலும் பெண்களே முன் நின்று நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி:
 
அகக் குரலும் புறச்சூழலும் -- மார்ச் 8ம் நாள் மாலை 6 மணி
தீபீகா அரங்கம் / அரும்பு வளாகம் / 49, டெய்லர்ஸ் சாலை / சென்னை 600 010
 
படைப்பும் பதிவும்
சுற்றுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற கவிதை நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர் சீதா ரவி பெற்றுக் கொள்கிறார்.
நூல் அறிமுகம்: கவிஞர் சுமதி மணிமுடி

படைப்பும் பகிர்வும்
கவிஞர்கள் கனிமொழி, வைகைச் செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி, இளம்பிறை, க்ருஷாங்கிணி, திலகபாமா, தமிழச்சி, வத்சலா ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்.

கருத்தும் காட்சியும்
கவிதைக் காட்சி: சுற்றுச் சூழல் குறித்துப் பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகளும், புத்தகக் கண்காட்சி: பெண் படைப்பாளிகளின் நூல்களும் பார்வைக்கு வைக்கப்படும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு