வியாழன், ஏப்ரல் 22, 2004

பிரமிள்

Introduction to lesser known authors in thamizh:

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 04-20-39 இல் இலங்கை திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலுர் அருகிலுள்ள கரடிக்குடியில் 11-6/97இல் மறைந்தார்.

தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த 'எழுத்து' பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளாராகவே மதிக்கப் பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரை கணித்து வந்துள்ளது.

நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும், புதுமைபித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒரு உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்தவர்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. 'படிமக் கவிஞர்' என்றும், 'ஆன்மீகக் கவிஞர்' என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்.

அவரின் சில கவிதைகளுக்கும், முழு விவரங்களுக்கும் ஃபாரம் ஹப் செல்லவும்.

ஆறாம்திணை கவிதைத் தொகுப்பு:
திசை மாற்றம் பட்டகம்



"ஒரு இலக்கிய முயற்சி உருவாவதற்கு மூன்று சக்திகள் துணை புரிகின்றன. இவைகளின் மூலபுருஷர்கள் முறையே எழுதுபவன், வாசகன், பிரசுரிப்பவன் இந்த முறை தான் சரியான முறை. ஆனால் யதார்த்த நிலையில் பிரசுரிப்பவன், வாசகன், எழுதுபவன் என்று மாறியிருந்தால் இலக்கியப் படைப்புகள் தரம் தாழ்கின்றன" - நகுலன்.


விடுகதை:
நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க - அது என்ன?


0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு