திங்கள், மே 17, 2004

வார சுரபி - இணைய இதழ்

அண்ணா கண்ணன், பொறுப்பாசிரியர்:

தரமான, ஆரோக்கியமான படைப்புகளை இந்த இதழில் தொடர்ந்து அதிக அளவில் வெளியிட இருக்கிறோம். புதிய சிந்தனைகளைத் தூண்டுவதும் இலக்கிய வளர்ச்சியுமே எமது நோக்கங்கள. இது, வணிக ரீதியிலான முயற்சியன்று எனவே, இதில் பங்களிக்கும் படைப்பாளர்களுக்குத் தனியே சன்மானம் வழங்க இயலாது. ஆயினும், அவர்கள் இந்தியாவுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமுதசுரபி அச்சிதழை அனுப்புவோம்.

ஓராண்டு முழுவதும் (2004 மே முதல் 2005 ஏப்ரல் வரை) அதிகப் படைப்புகளை அனுப்பிய மூவருக்குச் சிறப்புப் பரிசு வழங்குவோம். எனவே, எழுத்தாளர்கள் அதிக அளவு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி வைத்துள்ள எழுத்தாளர்கள், அதனைத் தெரிவித்தால் அவர்கள் படைப்பின் கீழ் அதனை வெளியிடுவோம். இது, வாசகர்கள், கருத்துத் தெரிவிக்க உதவும்.

அஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர்,
‘வார சுரபி’, அமுதசுரபி,
ஏ--- 7, இரண்டாம் அவென்யு, அண்ணாநகர் கிழக்கு,
சென்னை - 600 102. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு