வியாழன், மே 20, 2004

ஆய்த எழுத்து

Dinamani.com - Kadhir: ""உயிர், மெய் இரண்டின் துணையின்றி ஆய்த எழுத்து தனித்து இயங்காது. மாதவன், சூர்யா, சித்தார்த்தின் பாதை தனித்தனியானது. ஆனால் ஒருவரையொருவர் சாராமல் வாழமுடியாது என்பதே படத்தின் கரு' என்கிறார் இயக்குநர் மணிரத்னம்."

ரீடிஃப்: பிரேம் பானிக்கர் ஆய்த எழுத்தின் இந்தி வெளியீடுக்கு விமர்சனம் கொடுத்துள்ளார். நான் இவருடைய கிரிக்கெட் வர்ணனைகளை வெகு காலமாக படித்து வந்தவன். சில வருடம் முன்பு வரை இந்தியா கலந்து கொள்ளும் ஆட்டங்களின் விமர்சனங்களை இவர் ரீடிஃபில் கிரிக்கெட் பகுதிகளில் எழுதி வந்தார். இந்தியா தோற்றால் ஏறி மிதிப்பதும், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவதும் சாதாரணமாக நடக்கும். ஆனால், புள்ளி விவரங்களோடு, படு நுட்பமாக அலசுவார். ஹிந்துவின் மோகன் பார்வைகள் படித்து பழக்கப் பட்டவனுக்கு இவருடையது கொஞ்சம் தீவிர ஆராய்ச்சி போலத் தோன்றும்.

ஆய்த எழுத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எழுதியிருக்கிறார். அந்த அதி முக்கியமான காட்சி என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல் ரொம்ப இருந்தால் ஏ. ஆர். ரெஹ்மான் விசிறி குழுமத்தில் போய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு