சனி, டிசம்பர் 04, 2004

சொன்னதைச் செய்வோம்!

லாலூ பிரசாத் யாதவ்:
பிஹாரில் காட்டாட்சி நடப்பதாக சித்தரித்த ஒரு கார்ட்டூனில் என்னை புலியாக வரைந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அதில் நிதிஷ் குமார், எல்.கே.அத்வானி மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானை குரங்குகளாக சித்தரித்திருந்தார்கள்.


கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சாங்கிலியானா 'தினகரனில்':
வீரப்பனைக் கொன்றதற்காக அதிரடிப்படை வீரர்களுக்கு பரிசு வழங்குவது சரியல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.


ராமதாஸ் 'தினத்தந்தியில்':
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மதுப்பெட்டிகள் அதிகமாக விற்பனை செய்ததுதான் தமிழக அரசின் சாதனை.


வைகோ 'தினகரனில்':
பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றதில் எனது வழக்கைப் பொறுத்தவரை எந்தப் பலனும் இல்லை. இதை முன் தேதியிட்டு அமல்படுத்தியிருந்தால் எங்களுக்கு மட்டுமல்ல, சிறையில் வாடுகிற பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.


காங்கிரஸ் எம்.பி. கே.வி. தங்கபாலு 'தினமலரில்':
காமராஜர் ஆட்சியும் கருணாநிதி ஆட்சியும் ஒன்றுதான். இருவரும் பச்சைத் தமிழர்கள்.


விஜயகாந்த் 'தினத்தந்தியில்':
என் அரசியல் பிரவேசம் பற்றி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ந் தேதி அறிவிப்பேன். அதுவரை ஊறுகாயை தொடுவது போல் என் படங்களில் அரசியல் பற்றிய வசனங்கள் தவறாமல் இடம்பெறும்.


பாரதிராஜா 'குமுதத்தில்':
பாடப்புத்தகங்கள், தையல் மெஷின்கள் வழங்குபவரெல்லாம் தலைவர்கள் ஆகிவிட முடியாது.


கமல்ஹாசன் 'தினகரனில்':
பஸ், கிஸ், பிளைட் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைக்கு தமிழாகி விட்டது. எனது அடுத்த படத்துக்கு பாதி இங்கிலிஸ், பாதி தமிழில் பெயர் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.


அஜீத் 'குங்குமத்தில்':
நம்பர் ஒன் இடத்தை பிடிச்சே தீருவேன். அதை யாரும் தாண்டக் கூடாது. மீறி தாண்டிப் போறதா இருந்தா என்னோட பிணத்தைத் தாண்டித்தான் போகணும்.


16வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதைப் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 'தினகரனில்:
போகிற போக்கை பார்த்தால் வரும் மாதங்களில் அதிமுக அமைச்சரவை மாற்றம் வெள்ளி விழா கொண்டாடும் போல தெரிகிறது.


இந்துத்துவமும் தேசியவாதமும் ஒன்றே என்று பாஜக கூறியதற்கு சி.பி.ஐ. தலைவர் ஏ.பி. பரதன் பதில்:
தேசியவாதம் என்ற பெயரில்தான் ஹிட்லர் உலகம் முழுவதும் நாசம் விளைவித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்.


மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி:
மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வேறு விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நான் மக்களின் எதிர்பார்ப்புகளின்படி நடந்தால் பைத்தியமாகி விடுவேன்.


பா.விஜய் 'ஆனந்த விகடனில்':
வைரமுத்துவை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, அவருடைய சாதனையை மிஞ்ச வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கிறது. அனால் வைரமுத்துவைவிட என்னை ஆச்சரியப்படுத்துவது வாலிதான். அவர் எம்.ஜி.ஆரிலிருந்து தனுஷ் வரைக்கும் ஈடு கொடுக்கிறார்.


சத்யராஜ் 'ஆனந்த விகடனில்':
எல்லா சாமியார்களும் காமெடியன்கள்தான். அதில் குட்டிச்சாமி பெரிய காமெடியன்.


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் 'தினமணியில்':
முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதை தற்போது எதிர்க்கும் முதல்வர், அந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றது ஏன்?


ப்ரீத்தி ஜிந்தா:
என்னை சக நடிகர்களுடன் இணைத்துப் பேசுகிறவர்களை அடிக்க வேண்டும். இதை மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன் - என்னுடன் நடிப்பவர்களை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டேன்.


நமீதா 'குமுதத்தில்':
நாடு முழுக்க வேலையில்லாத் திண்டாட்டம். அதைப் பத்தி யோசிக்காமல் என்னப் பத்தி யோசிச்சா என்ன பிரயோஜனம்?


லாலூ பிரசாத யாதவ்:
இந்திய ரயில்வே கடவுள் விஸ்வகர்மாவின் பொறுப்பில் இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பும் அவர் கையில்தான். பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவர்தான். நானில்லை.

நன்றி: இந்தியா டுடே

1 கருத்துகள்:

லல்லுவை அடிச்சுக்க ஆளில்லை.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு