திங்கள், டிசம்பர் 20, 2004

மேடை - ஜெயபாஸ்கரன்

Jayabaskaran Kavithaigal:

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல்
எதிரிகளை
''எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்''
என்றாய்.
சலனமற்றுக் கிடந்த
உன் ஆதரவாளர்களின்
முன்னிலையில்

''நான் சொல்லிக் கொள்வது
என்னவென்றால்''
என்பதைத் தாண்டி
எதுவுமே விளங்கவில்லை
நீ சொல்லிக் கொண்டது
எதுவும்.

''இன்னொன்றையும்
குறிப்பிட்டாக வேண்டும்'' என்று
பலமுறை அறிவித்தாய்!
ஆயினும்,
ஒருமுறைகூட
குறிப்பிடவில்லை
அந்த 'இன்னொன்றை!''

''இறுதியாக ஒன்றைச் சொல்லி''
விடைபெறுவதாக முழங்கினாய்
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா நீ?

நன்றி: ஆறாம்திணை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு