செவ்வாய், ஏப்ரல் 05, 2005

கொட்டாவி - மாயாவி

தமிழ்நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாயிருக்கும்
ஒருவார்த்தை சொன்னாலும்
நான் உண்மையச் சொல்வேண்டா

மகராசன் பல்லவன்தான்
மலையேறச் சொன்னவன்தான்
கடலோரம் கட்டிவச்ச
சிற்பத்தைப் பாரேண்டா

இங்கு நல்லவன் யாருமில்ல
நான் பல்லவன் பேரப்பிள்ள
இந்த ஊரப்பார்த்த தோட்டத்துக்கு
காவல்காரன் நான்தாண்டா

ஆனா, ஆவன்னாவே தெரியாதவண்டா
ஆனால் நாலு பாஷைத் தெரியும் போய்யா
------

பல்லவனின் பெயர சொல்ல
சிற்பங்கள செஞ்சு வச்சான்
உன்னுடைய பெயர சொல்ல
என்ன செஞ்சே நீ

வைக்கோலால் செஞ்ச
கன்னுக்குட்டி நீ

கடற்கரை ஓரத்தில
கலங்கர நடக்குதாம்

ஒத்தைக் கண்ணில்
வழியக் காட்டி
சோம்பி நிக்குதே
ரெண்டு கண்ணும் இருந்தும் கூட
பார்க்க நல்லாயில்லை

இந்த வெள்ளைக்காரன்
எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையனை
வெளியேற
சொல்லவே மாட்டேண்டா

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு