வெள்ளி, டிசம்பர் 12, 2003

காலங்களில் அவள் ???

6-00am - 8-24am - பூர்வான்னம்
8-24am - 10-48am - பாரான்னம்
10-48am - 1-12 pm - மத்தியான்னம் (மத்ய அன்னம்)
1-12pm - 3-36pm - அபரான்னம்
3-36pm - 6-00pm - சாயான்னம்


சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.
சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை
கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்
எட்டு சாமங்கள் இருக்கின்றன.


முழுக்கணக்கு -->

2 கண்ணிமை = 1 நொடி
2 கைந்நொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை
2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)
3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)
2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
12 ஆண்டு = 1 மாமாங்கம்
5 மாமாங்கம் = 1 வட்டம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு