செவ்வாய், டிசம்பர் 23, 2003

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும் - மீனாக்ஸ்

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 3862:

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும்
============================================


எங்கள் bachelor வீட்டு சமையலறை
ஒரு ஆண்கள் ரா?¡ங்கம்..
எப்போதும் புயல் புகுந்து புறப்பட்டது போல்
அங்கங்கே சிந்திய சர்க்கரையும்
உலர்ந்த காய்கறிகளுமாய்
அலங்கோலமே அதன் அலங்காரம்..

ஒரு சில நாட்களைத் தவிர..!!

அந்த நாட்களிலெல்லாம்
என்னைக் காதலிக்கும் தேவதை
அங்கு பிரசன்னமாகியிருப்பாள்..

"மதிய உணவு சமைத்துத் தருகிறேன்"
என்று சொல்லி எங்கள் ரா?¡ங்கத்தில்
அல்லி ரா?யம் நடத்த வருவாள்..

அவள் சமைக்கையில் (அவள்) அழகை ரசிக்க நானும்
அவள் சமைக்கும் அழகை ரசிக்க என் அறைத்துணைவர்களும்
அங்கு கூடுவோம்..

"இவனையெல்லாம்
எப்படிக் காதலிச்சீங்க சி?டர்?" என்பதாக
அவர்களின் குறுக்கு விசாரணை ஆரம்பிக்கும்..
புன்னகையை பதிலாக்கி
என்னைக் கண்களால் கேலி செய்வாள்..

"சும்மா இருங்கடா.." என்ற என் சிணுங்கலைப்
பொருட்படுத்தாமல்
"இவனைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்காம
ஏமாந்துட்டீங்க சி?டர்.." என்பார்கள் என் எதிரிகள்..

அதற்கும் சிரித்து விட்டு,
என் தவிப்பைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,
"பரவாயில்லை..
மனசுக்குப் பிடிச்சுத் தான் ஏமாந்தேன்.." என்பாள்..
மறைக்க முயன்று தோற்று,
லேசாய் வெட்கப்படுவாள்..

போகிற போக்கில்
கரண்டியால் என் தலையில்
செல்லமாய் ஒரு தட்டு..

"சி?டர்.. நீங்க வெங்காயமெல்லாம்
நறுக்க வேண்டாம்.." என்பான் ஒரு நண்பன்..

"ஏன்??"

"நாங்க இருக்கும் போது
உங்க கண்ணில இருந்து
ஆனந்தக் கண்ணீர்ங்கிற பேரில கூட
கண்ணீர் எதுவும் வரக் கூடாது..!!"
என்று சொல்லி செண்ட்டியால் அடிப்பான்..

கேட்டதும் அவள் கண்களில்
ஆனந்தக் கண்ணீர் வரும்..!!
துடைத்தால் தெரிந்து போகுமென
சிரித்து முகம் திருப்பிக் கொள்வாள்..

"டேய்.. சும்மா நிற்காதே..
சி?டருக்கு ஏதாவது உதவி பண்ணு.."
என்று என் நண்பர்கள் வம்புக்கிழுப்பார்கள்..

அவள் மறுத்து,
"கல்யாணத்துக்கு அப்புறம்
அவர் தானே தினமும் சமைக்கப் போறார்..
இப்பவாவது சும்மா இருக்கட்டும்.."
என்று சொல்லி
பொய்க்கோபத்துடன் முறைக்கும் என்னை
ரசித்துச் சிரிப்பாள்..

சமையல் முடிந்ததும்
பரபரப்புடன் பரிமாறி
எங்கள் முகம் பார்த்து நிற்பாள்..

"சி?டர்..!! ரொம்ப நல்ல இருக்கு..
இவன் ரொம்ப கொடுத்து வச்சவன்.."
என்று சொல்வதைக் கேட்டு,
"ஏன்? என் அண்ணன்மார்
நீங்களெல்லாம் வந்து கேட்டா
நான் சமைச்சுப் போட மாட்டேனா என்ன.??
நீங்களும் கொடுத்து வச்சவங்க தான்.."
என்று பூரிப்புடன் சொல்வாள்..

எங்களைத் தனிமையில் விட்டு
நண்பர்களெல்லாம் மாடிக்குச் சென்றதும்
நான் பரிமாற அவள் சாப்பிடுவாள்..

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு
கடிகாரம் பார்த்து அலறி,
"நான் கிளம்பணும்.. நாளைக்கு பார்க்கலாம்..
நேரமாச்சு.." என்று பதறி
அண்ணன்மார்களிடமும் சொல்லிக் கொண்டு
கிளம்பிப் போவாள்..

அவள் வந்து போன பிறகு
தென்றல் நுழைந்து புறப்பட்டது போல்
அழகும் ஒழுங்கும் குடியேறும்..

எங்கள் வீட்டு சமையலறையில் மட்டுமல்ல,
எங்கள் உள்ளங்களிலும்..!!

-- Meenaks

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு