செவ்வாய், டிசம்பர் 30, 2003

அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி
சார்பில் நிற்பதற்கு போட்டா போட்டி. ஒரு ராஜீவ்
காந்தியோ, அத்வானியோ இறந்தால் மட்டுமே இந்தியாவில்
நிகழக் கூடிய அடிதடிகள் இங்கு நடக்கின்றன. முண்ணனியில்
உள்ள ஹோவார்ட் டீன் எல்லா அரசியல்வாதிகள்
போலவே, அமெரிக்காவில் தோன்றும் சகல பிரசினைகளுக்கும்,
வியாதிகளுக்கும், தலைவலிகளுக்கும், கணினி

சண்டித்தனங்களுக்கும் புஷ்ஷின் அரசாங்கமே காரணம்
என்று அறிக்கைப் போர் நடத்துகிறார்.




அது ஒரு நாலெழுத்து கெட்ட வார்த்தை. #%@ என்று எழுதலாம்
·..க் என்று எழுதலாம். வாயில் பெயர்ச்சொல்லாக, வினைச்

சொல்லாக, ஆச்சரியக்குறியாக, கோபக்கணையாக,
நகைச்சுவைக்காக எதுக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், அச்சில் ஏனோ கோலோச்ச வில்லை. 'வின்னர்'
ஆக ப்ரசாந்த் முயற்சிப்பது போல் சிரம் தசை நடக்கும் ஜான் கெரி இளவட்டப் பத்திரிகையில் நான் ஒண்ணும் கட்டுப்
பெட்டி இல்லையாக்கும் என்று திருவாய் மலர்ந்தருளுகிறார்.




காசு பணம் வாங்காமல் தீக்குளிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய கோவிலில் இரக்க குணத்திற்காக கும்பிடும் அவலோகித்தா போதிசத்வா முன் வேண்டிக் கொண்டு, இறக்கமற்ற நாடான அமெரிக்காவிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார். வியட்நாமியர் விடுதலையும், மனித உரிமையும், மத சுதந்திரமும் பெறவேண்டும்.




நம்ம காஷ்மீர் மாதிரிதான் இஸ்ரேலும். ஆனால், முப்து முகமத் சயித் குடும்பத்தார் கடத்தப் பட்டால், உயிருன் முக்கியத்துவம் உணரப்படும். இஸ்ரேலிய படை வீரருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனுக்கு அநீதி இழைக்கிறோம் என்று மனது குத்த, போர் படையில் இருந்து ஒழுங்காக விலகி, அஹிம்சை முறையில் எதிர்க்கிறார். வழக்கம் போல் சந்தில் யாராவது மனித குண்டு வீசி நூறு பேரைக் கொன்று விடுவார்களோ என்றெண்ணி, எதிர்ப்பவர்களைக் காலில் சுட ஆணையிட்டிருக்கிறார் இஸ்ரேலின் மேஜர். அதுவும் சிவப்புக் கோட்டைத் தாண்டாமல் இருக்க அடி மட்டுமே படுமாறு சுட்டவைதான்.

இஸ்ரேலின் ஊடகங்களும், மனித நல கழகங்களும், மனித உரிமை மன்றங்களும், வெகுண்டெழுந்து விட்டார்கள். எப்படி நம்மில் ஒருவனை சாய்க்கலாம். உயிர் போகா விட்டாலும், துவண்டது இஸ்ரேலியன் அல்லவா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு