வெள்ளி, டிசம்பர் 05, 2003

ஹே ராமும் பாபாவும்
------------------------
ஹே ராம்: காதல் இளவரசன் ஆஸ்காருக்காக எடுத்தது.
பாபா: சூப்பர் ஸ்டார் தன் மதிப்பை உயர்த்த எடுத்தது.

ஹே ராம்: கதை ஆரம்பிப்பது 1946.
பாபா: நிஜம் ஆரம்பிப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.

ஹே ராம்: கதை முடிவது 1999.
பாபா: இனிமேலதான் க்ளைமேக்ஸே.

ஹே ராம்: மொகஞ்சதாரோவுக்கு ஆதாரம் இருக்கிறது.
பாபா: இமயமலைக்கும் உண்டு.

ஹே ராம்: ஆனால், 2000 வருஷம் கழித்து எலும்பு கிடைப்பதெல்லாம் புருடா.
பாபா: சாமி கண்ணைக் குத்திடும்.

ஹே ராம்: முடிவில் பாதாள சாக்கடையில் இறங்குகிறார் சாகேத் ராம்.
பாபா: முடிவில் அரசியலில் இறங்குகிறார் பாபா.

ஹே ராம்: மகாத்மாவை கேவலப் படுத்துவது போல் தோன்றினாலும் முடிவு நெகிழ வைக்கிறது.
பாபா: "பாபாஜி"யை நம்பாதது போல் ஆரம்பித்தாலும்...

ஹே ராம்: தேவையில்லாத கிரா·பிக்ஸ்.
பாபா: (கேரளா சென்றாலும்) அடிதடிக்கு கிரா·பிக்ஸ் தேவைதான்.

ஹே ராம்: கிரீஷ் கர்னாட், சௌகார் ஜானகி, ஓம் பூரி, நாசர் என பலர் வீணடிக்கப்பட்டார்கள்.
பாபா: ரஜினியையும், "ராமகிருஷ்ணணையும்" தவிர மற்றவர்கள்.

ஹே ராம்: பாதியில் வந்த இளையராஜா ஏமாற்றவில்லை.
பாபா: முழுவதுமாக இருந்த ரெஹ்மான் காப்பாற்றவில்லை.

ஹே ராம்: சென்னை, கல்கத்தா, காசி, டில்லி.
பாபா: கோலா வளாகம், பெங்களுர் போதும்.

ஹே ராம்: தோல்விக்குக் காரணம் படம் பாமரனுக்குப் புரியவில்லை.
பாபா: படம் தோல்வியே இல்லை.

ஹே ராம்: ஒழுங்காக மார்க்கெட்டிங் செய்து இருந்தால் ஆஸ்கார் கூட வசப்பட்டிருக்கும் .
பாபா: நிறைய செய்யாமல் இருந்திருந்தால் எதிர்பார்ப்புக்கு
ஏற்றபடி இருந்திருக்கும்.

ஹே ராம்: சரிகாவுக்கு சிறந்த காஸ்ட்யூமர் தேசிய விருது கிடைத்தது.
பாபா: அனுப்பினால் அடுத்த வருஷம் திரைக்கதைக்குக் கிடைக்கும்.

ஹே ராம்: நான் தெரிந்துகொண்டது - அவனவனுக்கு அடி விழும்வரை ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
பாபா: அடி விழுந்து அடுத்தவர்களை கொலை செய்யாமல் இருக்க வேண்டுமானால் காதலிக்காதே; கல்யாணம் செய்யாதே.

ஹே ராம்: நம்பலாம்.
பாபா: நம்புவார்கள்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு