வெள்ளி, ஜனவரி 23, 2004

இளைஞர்களிடையே மூன்றாவது ஒருங்கிணைப்பு குழு! - கேடிஸ்ரீ

சென்னை ஆன்லைன்:
பொதுவாகவே இன்றைய கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று, மண்ணின் மீது பிடிப்பு, சமூக அக்கறை இல்லை... இன்றைய இளைஞர்கள் சினிமா, வன்முறை, பார்ட்டி, டிஸ்கோ என்கிற ரீதியில்தான் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால், இப்போழுதே, இந்த கணத்திலேயே அந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்... எங்களுக்கும் சமூகஅக்கறை, மொழிப்பற்று, நாளைய இந்தியாவைப் பற்றிய கனவுகள் எல்லாம் இருக்கிறது என்று உரத்த குரலில் குரல் கொடுக்கிறார் கபிலன் வைரமுத்து.

''தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்திருக்கிறது.. முதல் ஒருங்கிணைப்பு சுதந்திரப்போராட்ட காலத்தில் ஏற்பட்டது. அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே நாட்டின் சுதந்திரம், அடிமை சங்கிலியிலிருந்து வெளிவர வேண்டும் என்கிற எழுச்சியும், கோஷமும் ஏற்பட்டது. −ரண்டாம் முறை இளைஞர்களின் ஒருங்கிணைப்பு திராவிட இயக்க எழுச்சி தோன்றிய கட்டத்தில் ஏற்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களை சுயமரியாதை இயக்கங்களும், திராவிட வளர்ச்சியின் பரிமாணங்களும் ஒருங்கிணைத்தது.'' என்கிறார் கபிலன்.

தனிமனிதனின் முகத்தினால் மக்களுக்கு ஒர் இயக்கம் தெரியவருவதைவிட அவர்களின் கொள்கைகளின் மூலலே அந்த இயக்கம் மக்களிடையே தெரிய வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்... ஆகையால் இவ்வியக்கத்திற்கு என்று தனியாக தலைவர் கிடையாது என்பது சிறப்பம்சம்.

இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு 'என்றான் கவிஞன்'. தினசரி தான் போகும் ரயில், பார்க்கும் ரயில் நிலையம், வகுப்புகள், மாணவர்கள், கல்லூரி காதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இவர் பார்த்த நிஜங்கள் அத்தனையும் கவிதை வடிவில் 'என்றான் கவிஞன்' மூலம் சொல்லியிருக்கிறார். இந்த கவிதை தொகுப்பில் விவேகானந்தரின் ஓர் சிந்தனையை அவருடைய பாணியிலேயே கவிதையாக வடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

''பற்றற்றிரு' எனக்கு பிடித்த தத்துவம்'' என்கிறார் கபிலன். தந்தை வைரமுத்துவின் 'வளர்சிதை மாற்றம்' என்கிற கவிதை தனக்கு பிடித்த கவிதை என்கிறார் கபிலன்.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கல்லூரிகளில் ஆங்கில வகுப்பில் பாடம் படிப்பவர்களின் மனரீதியான போராட்டத்தை இவரின் இரண்டாவது தொகுப்பான 'என்றான் கவிஞன்' என்கிற கவிதைத் தொகுப்பில் 'தமிழ்மீடியம்' என்றொரு கவிதையின் மூலம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழிலேயே படித்து தொழிற்நுட்ப கல்லூரிகளில் நுழையும் மாணவர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில்... மொழி ரீதியான துன்பம் அவர்களுக்கு மனரீதியான துன்பமாக மாறிவிடுகிறது... மிகச் சிலர் தான் அதில் போராடி வெளிவருகிறார்கள்... பெரும்பாலானவர்கள் அந்த நான்கு ஆண்டுகளாகவும் வெளிச்சம் இல்லாத ஓர் இருட்டறையாகவே இருக்கிறது...

மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி எண் 24844767
மின்னஞ்சல் : to_kabilan@hotmail.com

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு