ஞாயிறு, பிப்ரவரி 08, 2004

காதல் சடுகுடு

Kaathal Sadugugu (c) Hindu

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழைநீராய்ச் சிதறிப் போகின்றோம் அன்பே

(மேகத்தில்)

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி
வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒருதுளியாகி
முத்தாய் மாறிடுவோம்

(மேகத்தில்)

கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்
கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்
ஆசை கொண்டு உன் ஆண்மையைக் காதலித்தேன்
மீசை கொண்டு உன் மென்மையைக் காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்

வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள்
வீட்டுக்குத் திரும்பி வரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம்
நிச்சயம் வசந்தம் வரும்

(மேகத்தால்)

அன்பே, அன்பே உனை எங்கனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருப்பேன்
உன்னை எண்ணி என் உயிர்த்தலம் உறைந்திருப்பேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த் தரிப்பேன்

அன்பே, அன்பே உனை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே, பெண்ணே நம் பிரிவினில் துணையிருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று
இயற்கையைக் கண்டிக்கிறேன்
ஏன்தான் அவரைக் கண்டேன் என்று
என் கண்களைத் தண்டிக்கிறேன்

(மேகத்தால்)

நன்றி: புகாரி - உயிரெழுத்து

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு