புதன், பிப்ரவரி 18, 2004

இந்தியனென்று சொல்லடா... இந்தியில் பேசடா...

தமிழ் தழைக்குமா என்று இலக்கிய உலகில் இருபத்தி ஆறாம் முறையாக (நான் கணக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து) விவாதம் நடந்து கொண்டிருக்க, இந்த ஹிந்திகாரர்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. இன்னும் பெயரிலிகள் கால் வைக்காத விரல் விட்டு எண்ணக் கூடிய வலைப்பதிவுகள் மட்டுமே (நானறிந்த வரையில்) உள்ளன. சேவாக் தன்மானம் பார்க்காமல் ஆங்கிலக் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதிலளிக்கிறாராம். அவர்களும் நியாயமான கோபத்துடன், ஆங்கிலப் பத்திரிகைகளை மொத்தமாக தாக்கியும், ஹிந்தியில் பேசுவதில என்ன அவமானம் என்றும் (நம்மைப் போன்றே) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

எனக்கு ஒரு டவுட்: பந்து வீச்சாளர் 'பாலாஜி' தமிழில் பேசினால் இந்திய ஊடகங்கள் வறுத்தெடுப்பதை விடுங்கள்; இவர்காள் என்ன சொல்வார்கள்!
(பின்னறிவிப்பு: "நான் ஹிந்திக்கு எதிரியல்ல; ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவாளனுமல்ல")

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு