வியாழன், ஏப்ரல் 22, 2004

ஒரு கடிதம் - சிபிச்செல்வன்

உயிர்மையில் டிசம்பர் இதழில் 53ஆம் பக்கத்தில் 'கவிதைத் திருவிழா' என்ற நிகழ்வைப் பற்றிய குறிப்பில் என்னுடைய "நீண்ட கட்டுரை பார்வையாளர்களின் பொறுமையைக் கடுமையாகச் சோதித்தது" என்று உள்ளது.

நான் படித்த கட்டுரையின் தலைப்பு 'எண்பதுகளில் தமிழ்க் கவிதையின் போக்குகள்'. 80களிலிருந்து 90 வரை தமிழ்க் கவிதைகளின் போக்கைக் குறித்து சுமார் 100 கவிதை நூல்களை வாசித்து ஒன்பது பக்கங்கள் எழுதப்பட்ட கட்டுரை அது. பத்து ஆண்டுகள் என்பது 'நீண்ட காலம்'. என் கட்டுரை 'நீண்டது' என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக விரிவாக 100 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதப்பட வேண்டிய கருத்துகளை 9 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறேன்.

கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளில் அதிக எதிர்வினைகளை எழுப்பிய கட்டுரையும் என்னுடையதே. அந்த எதிர்வினைகளுக்கான பதிலையும் அந்த அரங்கத்திலேயே கூறினேன். இவை தவிர அரங்கிற்கு வெளியிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்டுரையின் 'அதிர்வுகள்' பரவியுள்ளன. சிலர் தங்கள் பெயர்கள் அக்கட்டுரையின் சேர்க்கப்படவில்லையென்று வருத்தப்பட்டார்கள். சிலர் தங்களை விமர்சித்திருந்தமைக்காக வருத்தப்படவும் செய்கிறார்கள். இவையெல்லாம் அக்கட்டுரையின் முக்கியத்துவத்தைக்
காட்டுகின்றன. 'பொறுமையச் சோதித்த' கட்டுரையையும் சிலர் கவனமாகக் கேட்டு எதிர்வினையாற்றிவிடுகிறார்கள்.

சிபிச்செல்வன்
சென்னை

நன்றி: உயிர்மை/சன. 2004

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு