வியாழன், நவம்பர் 11, 2004

மறுமலர்ச்சி நன்றிப் பாடல்

முதல்வருக்கு தமிழ் திரைப்பட பிரமுகர்கள் எடுத்த விழாவின் எதிரொலியாக...

ந்னறி: Music India OnLine - Marumalarchi


பெண்:
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே....

ஆண்:
ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்

உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
----------------------------
பெண்:
செவ்விளநி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிர்தான்

ஆண்:
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்

பெண்:
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்

ஆண்:
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண்:
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல
----------------------------
ஆண்:
வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம்
யாரும் கண்டதில்லையே!?

பெண்:
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே!

ஆண்:
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா

பெண்:
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா

ஆண்:
கண்ணன் கொண்ட ராதையென
ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு