வெள்ளி, ஏப்ரல் 29, 2005

திரைப்படத்தில் திருமா

செய்தி: Thirumavalavan goes from censoring Movies to Acting in them

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். 'அடங்க மறு' போன்ற அரசியல் கட்டுரைகள் தொகுப்பின் மூலம் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் திருமா.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'அன்புத் தோழி' படத்தில் நடிப்பதற்கு அணுகியுள்ளார்கள். ஏற்கனவே பி.ஜே.பி.யின் எம்.பி. திருநாவுக்கரசர், திமுக-வின் ஸ்டாலின், பா.ம.க.வின் ராமதாஸ் போன்றோர் வெள்ளித்திரையில் தலையை காட்டி இருக்கிறார்கள்.

திருமா ஈழப் போராட்டத்தை முனைப்புடன் கவனித்து ஈடுபட்டும் வருகிறார். இலங்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு திருமாவின் ஒப்புதலும் கிட்டிவிட்டது.

கிருபா சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக பரணியும் (?) நாயகியாக சௌம்யாவும் நடிக்கிறார்கள்.

நன்றி: teakada

திருமா குறித்த முந்தைய பதிவு | நையாண்டி -- திட்டாந்தப்பேச்சு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு