செவ்வாய், மே 03, 2005

அரசு பதில்

Kumudam Weekly ::


எஸ்.ஜனார்த்தனன், சின்னதாராபுரம்.
‘தமிழ்நாடு விளங்காமல் போனதற்கு சினிமா பைத்தியங்களாக தமிழர்கள் இருப்பதுதான் காரணமா?

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரையரங்கங்கள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க வேண்டுமே? தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தது வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.



வி.மாரிமுத்து, பரப்பாடி.
சிறந்த கலைப் படைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன?

(1)வாழ்க்கையின் அம்சம் ஒன்றை அந்தப் படைப்பு புதிதாக வெளிப்படுத்துகிறதா? வெளிப்படுத்தப்பட்ட விஷயம் உண்மையானதுதானா?
(2) அது அழகாகவும், சொல்ல முற்பட்ட பொருளுக்கு ஏற்ற முறையிலும் அமைந்திருக்கிறதா?
(3) கலைஞனுக்கும் அவன் படைத்த படைப்புக்கும் உள்ள உறவு சத்தியமானதா? மூன்றாவதாகச் சொன்ன இந்த அளவுகோல், மிக முக்கியமானது. படைப்பவனிடம் உதித்த அதே உணர்ச்சிகள், அதைப் படிப்பவனுக்கோ, பார்ப்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏற்படச் செய்வதே அந்தச் சத்தியம்தான்’ (சொன்னது டால்ஸ்டாய்)

1 கருத்துகள்:

Balaji,
I liked the second one very much...Thanks!
I need to Store this Somewhere.

Regards,Arun Vaidyanathan

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு