வெள்ளி, மே 06, 2005

இரு தலைக் காதல்

ஒரு தலை ராகம் ::

இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.

உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே, எத்தனை நாள் வாழ்வது.



காதல்

உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.

உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.

கண்மணியே, அழுவதேன்.
வழித்துணை நானிருக்க???



கண்ணீர் துளிகளை, கண்கள்
தாங்கும் கண்மணி, காதலை
நெஞ்சம் தான் தாங்கிடுமா?

கல்லறை மீது தான்
பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சாரக்கம்பிகள் மீது,
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத்தாண்டும்.

வளையாத நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்.

நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்.



தந்தையையும் தாயையும் தாண்டி
வந்தாய் தோழியே, இரண்டுமாய்
என்றுமே நானிருப்பேன்

தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள்
அனைத்தையும் நானெதிர்ப்பேன்.

வென்னீரில் நீ குளிக்க,
விரகாகி தீக்குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக்கலப்பேன்.

விழிமூடும் போதும் முன்னே
விலகாமல் நானிருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்
நானென்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு