வெள்ளி, ஜூன் 24, 2005

ஒரு நாள் ஒரு கனவு

இசை: இளையராஜா


எண்பதுகளில் இளையராஜா யாருக்கு இசையமைத்தாலும் ஹிட்டாகும். ஆனாலும், கோவைத்தம்பி, ஃபாசில் என்றால் சிறப்பான கவனிப்பு தென்படும். 'உயிரே உயிரின் உயிரே', 'சின்ன சின்ன ரோஜாப்பூவே', 'பூப்பூக்கும் மாசம் தைமாசம்' என்று TDK-வில் 90 நிரம்பிவிடும்.

இதையே வாலி கம்போஸிங்கின் போதும் கோடிட்டுப் பேசுகிறார். அவர்களின் இயல்பான உரையாடலும் இருக்கிறது. இந்த மாதிரி சிறப்பு 'Making of' எல்லா ஒலிப் பேழைகளிலும் இடம் பிடிக்கவேண்டும்.

ஏற்கனவே 'கல்யாண அகதிகள்' படத்திற்கு கே. பாலச்சந்தரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைக் கொடுத்தார். வி எஸ் நரசிம்மன், பாலச்சந்தர் மற்றும் பாடலாசிரியர் (யார்?) எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் வெளிவந்த நிகழ்ச்சிகளின் தலைப்பைக் கொண்டு பாடல் எழுதுவதையும் மெட்டுப் போடுவதையும் பதிவாக்கியிருந்தார்கள்.

ஃபாசிலும் இளையராஜாவும் மீண்டும் அசத்தியிருக்கிறார்கள்.


1. கஜுராஹோ - ஷ்ரேயா கோஸல், ஹரிஹரன் - 3.5/4

பிடித்த பாடகி; பிடித்த பாடகர்; பிடித்த இசையமைப்பாளரும் சிரத்தையாக டூயட் போடுகிறார். அவிழ்த்துப் போட்டு கிளர்ச்சியை மட்டும் கிளப்பி விடாமல் நினைவில் நிற்கும்படி காட்சியமைக்கும் இயக்குநர். ஸ்ரீகாந்த்தும் சோனியா அகர்வாலும் 'கனா கண்டேன்' போல் ஏமாற்றாமல் பட்டை கிளப்பும் பாடல்.


2. என்ன பாட்டு வேண்டும் - சோனு நிகம் - 2/4

இளையராஜாவின் அட்வைஸ் பாடல். (ஏவிஎம் சரவணன்: படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாட்டுகள் இருக்கும். 'இளையராஜா டைட்டில் சாங் பாடினால் படம் நன்றாக ஓடும்' என்று ஒரு சென்ட்டிமெண்ட் இருந்தது. வாலி 'அம்மன் கோவில் கிழக்காலே' என்று ஒரு பக்திப் பாட்டு எழுதித் தந்தார். ராஜா பாடினார். அதுதான் கேசட்டில் ஒரு பாட்டு எக்ஸ்ட்ராவாக வந்தது.)

'புரியாத பாட்டை விட்டு
புரிகின்ற பாட்டைக் கேள்'



3. காற்றில் வரும் கீதம் - ஷ்ரேயா கோஸல், பவதாரிணி ஹரிஹரன், சாதனா சர்கம், இளையராஜா - 3.5/4

இன்றைய தூள் பாடல்.

'வருந்தும் உயிருக்கு
அரு மருந்தாகும்
இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும்'



4. கொஞ்சம் திற - சோனு நிகம், ஷ்ரேயா கோஸல் - 2/4

இந்தப் பாடலுக்கு சோனு நிகம் தேவையா :-(


5. காற்றில் வரும் - இளையராஜா

வாலி: 'ஸ்ரீமுகுந்தா கேசவா... நான் உன் புகழைப் பேசவா...' எப்படியிருக்கும்?
ராஜா: நல்லாருக்கு. ஆனால், பாட்டில் வந்து 'பேசவா' என்றிருக்கிறது
வாலி: பாடவா என்றிருக்கணும்கிறியா? கேசவா என்றவுடனே இயைபுத் தொடை பேசவா என்று போட்டுட்டேன். பாடவா என்று போட்டா 'கேசவா'வை 'ஆடவா' என்றுதானே போடணும்.
ராஜா: அது நல்லாருக்காது
வாலி: இன்னும் ஒரேயொரு தடவைப் போட்டுக் காட்டேன்.
ராஜா: ஒரு தடவை என்னண்ணா... ஆறுவாட்டி பாடலாம்.
வாலி: ...
ராஜா: ஆஹா... நீங்களே நல்லா பாடறீங்க
வாலி: நான் பாடி யார் கேக்கறது? நீதான் கேக்கணும்


6. இளமைக்கு - சோனு நிகம் - 1.5/4

ரஜினி, விஜய், அஜீத் பாதையில், நாயகனின் எழுச்சிப் பாடல். திரைப்படத்தில் இடம்பெறும் சமயத்தில் தம்மடிக்கவோ, பாப்கார்ன் வாங்கவோ, வலைப்பதிவுக்கு விமர்சனக்குறிப்புகள் எடுக்கவோ பயன்படும் நேரம்.


7. காற்றில் வரும் - ஷ்ரேயா கோஸல், பவதாரிணி

8. பொண்ணுகிட்ட மாப்பிள்ள - டிப்பு, மஞ்சரி - 3/4

குடும்பம், நண்பர்கள் எல்லாரும் இணைந்த குரல்களாய் கலாட்டா பாடல். நடுவே கொஞ்சம் ரம்மியமான பார்வை பரிமாறல். மீண்டும் குழுவோடு கும்மாளம்.


ஜூலி கணபதிக்குப் பிறகு ஏமாற்றாத (ஆனாலும் 101% திருப்தி கொடுக்காத) இளையராஜா படப் பாடல்கள். (oru naal oru kanavu)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு