புதன், ஆகஸ்ட் 17, 2005

உலகத் தமிழர் பேரமைப்பு

Ulaga Thamizhar Peramaippu - Pazha Nedumaran with Mu Mehtha, Abdul Rehman

மாநாட்டு உரைகள் | தொடக்கவிழா மாநாட்டு மலர்

திரு.பழ.நெடுமாறன் :: உலகத் தமிழர் பேரமைப்பு இருபது ஆண்டுகளாக எண்ணற்ற அறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் சிந்தனையிலே ஊறித் திளைத்து இன்றைக்கு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்ற முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இத்தகைய அமைப்பை நறுவுவதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியெல்லாம் சொன்னார். 1980 ஆம் ஆண்டில் நான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒன்றுசேர்க்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை வெளியிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். பத்து கோடி ரூபாயை ஒதுக்கினார். மதுரையிலே ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நயமிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்கள் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவருடைய மறைவோடு அது அப்படியே தூங்கிவிட்டது.

மலேசியாவிலுள்ள நம்முடைய நண்பர் டேவிட் அவர்கள் இதற்கான முயற்சி எடுத்தார். உலகத் தமிழ் மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை. அமெரிக்காவிலுள்ள டாக்டர் தணி.சேரன் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட பெருமை மறைந்த ஈழத்து தனிநாயக அடிகளைச் சார்ந்தது.

1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னையிலே மறைந்த இர.ந.வீரப்பனார் தலைமையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு நறுவனத்தின் வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று அவர் என்னை அழைத்த போது அந்த மாநாட்டில் நான் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டேன். உலகத் தமிழருக்கு ஒரு குடை அமைப்பு, உலகத் தமிழருக்கு ஒரு கொடி, உலகத் தமிழருக்கு ஒரு தேசியப் பண், உலகத் தமிழருக்கென்று ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு என்று ஒரு தேசிய உடை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தேசியப் பண்ணினை நம்முடைய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல இந்தக் கொடி உலகத் தமிழருக்கான கொடியை வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்கு உலகத் தமிழர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் பேரமைப்பு ஐந்து மீட்புகளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது: மொழி மீட்பு. பண்பாடு மீட்பு. வரலாறு மீட்பு. இன மீட்பு. மண் மீட்பு ஆகிய ஐந்து மீட்புகள் உடனடியாக நடைபெற்றாக வேண்டும்.


மாண்புமிகு பி.சந்திரசேகரன், இலங்கை அமைச்சர்
திரு.அ.விநாயகர்த்தி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. எம். எஸ். செல்லச்சாமி, இலங்கைப் பொது வசதிகள் சபைத் தலைவர்
பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம் எப்.ஆர்.சி.பி.
கவிஞர் கா.வேழவேந்தன்

முனைவர் அவ்வை நடராசன்
முனைவர் ப.கோமதிநாயகம்
முனைவர் க.நெடுஞ்செழியன்
முனைவர் மணவை முஸ்தபா
மருத்துவர் பொன்.சத்தியநாதன் (ஆசுதிரேலியா)

முனைவர் இரா.இளவரசு
முனைவர் க.ப.அறவாணன்


தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியும் பண்பாடும் :: முனைவர் வி. கோவிந்தசாமி
மியம்மாவில் (பர்மா) தமிழர் நிலை :: கோ. க. மணிமேகலை
திருக்குறளே இனமீட்சிக்கு வாழ்வியல் நெறியாகட்டும் :: மு. மணி வெள்ளையன் (மலேசியா)
இராவண காவியத்தில் தமிழ்த் தேசியச் சிந்தனை - ஒரு பார்வை :: கி. த. பச்சையப்பன்
மின் வெளியில் நிரந்தரமாகும் தமிழ்மொழி :: நா. கண்ணன் (செருமனி)
தமிழும் தமிழரும் :: பேராசிரியர் அரங்க. முருகையன் (இலண்டன்)
உலகநாடுகளில் தமிழர்
கனவு நனவாகிறது :: பழ. நெடுமாறன்



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு