புதன், ஜனவரி 04, 2006

சிவகாசி

வாடா வாடா
வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம்
வாழ்ந்து பார்ப்போம் வாடா

நீயும் நானும்
நீயும் நானும் ஒண்ணா
...

உன்னோட உயர்வுக்கு
உன்னோட வேர்வை
என்னோட உயர்வுக்கு
என்னோட வியர்வை

யாரோட உயர்வையும்
யாராலயும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா



அப்பன் சொத்தை
பாட்டன் சொத்தை
தூக்கிப் போடுடா
சொந்தக் காலில்
நீயும் கொஞ்சம்
வாழ்ந்து பாருடா

உன்னப் பத்தி
என்னப் பத்தி
என்ன பேச்சுடா
ஒத்த மூச்சு
நின்னுபுட்டா
எல்லாம் போச்சுடா

ஆயுள்ரேகை தேயும் வரை
உழைப்போமடா
உழைச்சு நாம ஆயுளத்தான்
வளர்ப்போமடா

வாழும்வரை மத்தவன
மதிப்போமடா
மதிச்சுப்புட்டா வாழ்ந்தபின்னும்
இருப்போமடா

இன்னிக்கென்ன கெழம
நாளைக்கென்ன கெழம
நாள் பார்த்து நாள் பார்த்து
தூங்காதடா

போனா திரும்பாதுடா
வாழ்க்கை பெரும்பாடுடா


வந்தவனும் போனவனும்
கோடி பேருடா
சுட்டபின்னும் வாழ்ந்தவன் யாரு
தேடிப் பாருடா

வானம் மேல பூமி கீழ
இடையில் நாமடா
இதில் யாரு மேல
யாரு கீழ
என்ன கேள்விடா

கனவில் வாழ்க்கை
வாழாதடா
வாழ்க்கை கனவா
போகுமடா

வேதாந்தம் சித்தாந்தம்
பேசாதடா
பேசிப்புட்டா வாழுங்காலம்
பத்தாதடா

சாமி போட்ட கணக்கு
நெத்தி மேல இருக்கு
நீயாக கணக்கத்தான்
போடாதடா

போனா திரும்பாதடா
வாழ்க்கை பெரும்பாடுடா


| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு