வெள்ளி, ஜூன் 23, 2006

Chakkaa Maara

கப்பி பய அழைத்ததற்கு நன்றி. என்னுடைய ஆறு:

சேவை நிறுவனங்களுக்கு வருட சம்பளத்தில் ஒரு சதவிகிதமாவது மேற்கத்திய நாடுகளில் ஈந்து வருகிறார்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுவதை மாதாந்திர செலவாக செய்கிறார்கள். கத்ரீனா, நிலநடுக்கம் போன்ற அழிவுகளின் சமயம் மட்டும் அல்லாமல், எப்போதும் உதவிக் கொண்டே இருக்கும் மனம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

  1. Sneha India - How You Can Help: தற்கொலையின் விளிம்பில் இருப்பவர்களை காக்கும் அமைப்பு. தொலைபேசியில் உறுதுணை ஆலோசனை, விழிப்புணர்வு என்று கடந்த பதினேழு ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஸ்னேஹாவைத் துவக்கிய லஷ்மி விஜயகுமார், தற்போது சன் டிவியிலும் மனநலக் குறிப்புகளை 'வணக்கம் தமிழக'த்தில் சொல்லி வருகிறார். (மறை வெளியீடு: என்னுடைய சகோதரன் ஸ்னேஹாவில் தன்னார்வலராகவும் பொறுப்பாளராகவும் இயங்கி வருகிறார்.)

  2. DISHAA.ORG: பிட்ஸ், பிலானியிலும் சாந்தோம் பள்ளியிலும் இணைந்து படித்த சகாவினால் நடத்தப் படுகிறது. எளிய முறையில், மிகமிகக் குறைவான நிர்வாகச் செல்வுகளுடன் சேவை நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள்.

  3. AID - Home: நேரடியாக இவர்களின் நடவடிக்கையைக் காணும் வாயப்பு கிடைத்திருக்கிறது. தன்னார்வலர்களில் பலர் மேற்கத்திய நாடுகளில் இருந்து, உவப்புடன் கிராமப்புறங்களில் தொண்டாற்றி வருகின்றனர்.

  4. Udavum Karangal: அனைவரும் அறிந்த, நம்பிக்கையான அமைப்பு. நம்முடைய பணம் எவ்வாறு சென்றடைகிறது என்பதை தொலைபேசியில் உரையாடவும் செய்யலாம்.

  5. Save the Children: Helping Children in Poverty and Children in Crisis: நான் வேலை பார்க்கும் நிறுவனம் போல் பல நிறுவனங்களில் செஞ்சிலுவை மற்றும் சேவ் தி சில்ரன் போன்ற அமைப்புகளுக்குக் கொடுக்கும் உதவியை இரட்டிப்பாக்குமாறு matching செய்கிறார்கள்.

  6. Child Aid Foundation: குழந்தைத் தொழிலாளிகளைத் தவிர்க்க உதவுகிறார்கள். நண்பர்களில் பலர் ஆர்வமுடன் பங்கெடுக்கும் அமைப்பு.




ஆறு மேற்கோள்கள்; மொழிபெயர்ப்பவருக்கு நன்றிகள் :-)
  1. He wrapped himself in quotations- as a beggar would enfold himself in the purple of Emperors.
    - Rudyard Kipling

  2. Never interrupt your enemy when he is making a mistake.
    - Napoleon

  3. In the part of this universe that we know there is great injustice, and often the good suffer, and often the wicked prosper, and one hardly knows which of those is the more annoying.
    - Bertrand Russell

  4. There is a luxury in self-reproach. When we blame ourselves we feel that no one else has a right to blame us.
    - Oscar Wilde

  5. Before we set our hearts too much upon anything, let us examine how happy they are, who already possess it.
    - Francois de la Rochefoucauld

  6. A witty saying proves nothing
    - Voltaire



| |

4 கருத்துகள்:

'ஈ'கையின் சிறப்பை அழகாச் சொன்னீங்க. 'ஆறு'தலான பதிவு.

:-D) தர்மம் சரணம் கச்சாமி

அழைப்பை ஏற்றதற்கு நன்றி பாலா..

அருமையான அவசியமான பதிவு!!!

வள்ளுவம் சொல்வது போல் அருள் உடைய நெஞ்சில் இருள் சேராது...

நன்றி பாலா...

Thx for the invite, Kappi Folks :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு