வெள்ளி, நவம்பர் 03, 2006

Kalki Cartoon

Tamil Nadu Civic elections and Denial of permission for meeting

நன்றி: கல்கி



| |

10 கருத்துகள்:

2001ல் கல்கி போட்ட கார்ட்டூன் எதுனா இருந்தா எடுத்து போடுங்க, அதுக்காக 2006ல் நடந்தது நியாயம்னு சொல்லலை, 2001க்கு 2006 கணக்கு சரிதான் போ என்றும் சொல்லவில்லை, ஆனால் நடுநிலைவாதிகளின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாமே அதற்கு தான்.

கல்கி போன்ற பத்திரிகைகள் 2001-இலேயே இணையத்தில் இருந்தாலும், தங்களின் பழைய பக்கங்களை கழற்றி எடுத்து விடுவது, இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வசதியாக இருக்கிறது. ஏதோ, நம்மானாலானது, இவற்றை சேமித்து, கோப்பாக ஆக்கி வைத்தாலாவது, வேடங்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும்.

நன்றி குழலி.

எனக்குத் தெரிந்து கல்கியில் தீவிர ஜெயலலிதா எதிர்ப்புக் கார்டூன்களையும் பார்த்திருக்கிறேன். இன்னமும் சொல்லப் போனால் ஜெயேந்திரர் பற்றி மற்ற பத்திரிகைகள் புலனாய்வு செய்து வெளியிட்ட விவரங்களுக்கு முன்பே நாகரீகமாக கல்கியும் வெளியிட்டது. அதையே ஆதாரமாகக் குறிப்பிட்டு ஜெயேந்திரர் கைதை நியாயப்படுத்தி சன் டீவியில் பேசினார்கள்.

நூற்றுக்கு நூறு நடுநிலைமை என்பது மிகக்கடினம். ஆனால் முடிந்தவரையில் மற்ற பத்திரிகைகளை விட நடுநிலமையாகவே இருந்திருப்பதாக நான் கருதுகிறேன். சமீபத்தில் கல்கி படிப்பதில்லையால்...அதன் இப்பொழுதைய போக்கு எனக்குத் தெரியாது.

குழலி, கருணாநிதி எதிர்ப்பு என்பதே ஒருவரின் நடுநிலமையைக் கேள்விக்குள்ளாக்குமெனில் அந்தக் கேள்வியே நடுநிலமையற்றது. தேர்தல் காலந்தொட்டு இந்தக் கருத்தை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதா எவ்வாறு அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவரோ...அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் கருணாநிதி. ஜெயை அகற்றக் கருணாநிதியைக் கொண்டு வருவதும் ஜெயே தொடர்வதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான். இவர்கள் இருவரும் தின்று தீர்த்தது போதும்...அடுத்தவனும் கொஞ்சம் தின்று விட்டுப் போகட்டும் என்பதே இன்றைய நிலை. கருணாநிதி வந்த பிறகு இலவசத் திட்டங்கள்தான் சிறப்பாகப் போகிறதே தவிர கீரிப்பட்டி பாப்பாப்பட்டி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாமா விஜயப் பெருமை மட்டும் பேசுகிறார். ஜெயலலிதாவைக் கேட்கவே வேண்டாம். இன்னும் அவர் திருந்தவில்லை என்பது தெரிகிறது. சென்ற வார பழைய கல்கியொன்றைப் பார்க்க நேர்ந்தது. எடுத்துப் புரட்டினால் விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா புலம்பியதைக் கிண்டலடித்து அதிமுக மூழ்கும் கப்பல் என்று எழுதிய கார்ட்டூன்.

ஏன் சொல்ல வருகிறேன் என்றால் ஒவ்வொரு முறையும் முன்பு என்ன செய்தாய் என்று கேட்பது தகாது. முன்பு தவறே செய்திருந்தாலும் அவன் இப்பொழுது திருந்தியிருந்தால்? முன்பு தவறு செய்ததனால் அவன் எதுவுமே சொல்லக்கூடாது என்று ஆகிவிடுமே. ஆகையால் சொன்ன கருத்து சரியா தவறா என்று மட்டும் பார்த்தாலே போதும். பிரச்சனைகள் பல தீர்ந்து போகும்.

முன்பொரு பதிவில் இட்ட பின்னூட்டம்:

சமீபத்தில் படிக்க (மொழிபெயர்க்கவும் நினைத்த) சிறப்பான கட்டுரை: Deja Vu - WSJ.com: "In Early Newspapers, Only 'Mr. Silky Milky' Would Be Impartial"

---நூற்றுக்கு நூறு நடுநிலைமை---

ஒவ்வொரு விஷயத்தை எடுக்கும்போதும் இருபக்கமும் பார்ப்பது balanced reporting. இந்த கார்ட்டூனை தனித்துப் பார்க்கும்போது நடக்கும் நிகழ்வை வெகு துல்லியமாக, நறுக்கு தெறித்தது போல் பிரதிபலிக்கிறது.

---ஒவ்வொரு முறையும் முன்பு என்ன செய்தாய்---

அருமையான கருத்து ஜி.ரா.

---சொன்ன கருத்து சரியா தவறா என்று மட்டும் பார்த்தாலே போதும்.---

தெளிவான எண்ண வெளிப்பாட்டுக்கு நன்றி!

// G.Ragavan said...
........கருணாநிதி எதிர்ப்பு என்பதே ஒருவரின் நடுநிலமையைக் கேள்விக்குள்ளாக்குமெனில் அந்தக் கேள்வியே நடுநிலமையற்றது......

....//

டிட்டோ.

ரகவனின் அருமையான கருத்துக்களை வரவேற்க்கிறேன். இந்த ஐயாவும்;அம்மாவும் நீக்கப்பட வேண்டியதுதான். தமிழ்நாடு உருப்பட செய்வீங்களா???
யோகன் பாரிஸ்

கார்ட்டூன் சொன்ன கருத்து சரி

Another pertinent perspective, applicable to the Tamil blogdom as well...

How the Web Polarized Politics: The Internet once promised a new era of communications and understanding across disparate cultures and beliefs. But Gerry McGovern, a web content expert, says it's only served to deepen the divide. Does the web encourage political polarization?

Inna Bala!
Soukkiyama?
Dont read kalki Bala.

Kapali
Kannamma peddai

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு