திங்கள், மார்ச் 08, 2004

தென்றல் - புத்தம் புது பாட்டு

நன்றி: Yahoo! Groups : Vaali
மற்றும் ராகா

புஷ்பவனம் குப்புசாமி:(திரையில் லாரென்ஸ்)
வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்

இருக்கோ இல்லையோ தெரியாது
ஓரு வேலை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்
பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை போடத் தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்

கோரஸ் 1:
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
ஏன் நெத்தியிலே இடி இடிக்கும் (அல்லது) கிடுகிடுக்கும் தாண்டவக்கோனே

பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே

ஹேய்...

கோரஸ் 1

ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து
தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு
ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி
தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள
ஆதியில புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி

தந்தன... தந்தன...

ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் - அந்த ரங்கசாமி
நேத்து நனவாக நாளை கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டார் உண்டா
அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா

எஸ்.பி.பி.: (திரையில் பார்த்திபன்)
பறை பறை பறை...
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை, வெற்றி பறை, போர்கள் முடிக்கும்,
புனித பறை ,
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை

பு.கு. : (வசன கவிதை)
என் பாட்டன் முப்பாடன்களோடு போயி சேரப் போறேன்
இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே
ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது
கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பாத்துக்கங்க என் பறையை...

என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு