சனி, மே 01, 2004

கலைஞரைக் கேளுங்கள்

திமுக தலைவர் கலைஞர் நாளை சன் டிவியின் மூலம் வாக்காளர்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதில் கொடுக்கிறார். எனக்குத் தோன்றிய சில வினாக்கள்:

1. ஒரு அடையாளத்திற்காக, பச்சைத் துண்டு மட்டும் அணிந்து வருவீர்களா?

2. பிஜேபியுடன் மீண்டும் என்றாவது கூட்டு வைத்துக் கொள்வீர்களா? என்ன நிபந்தனைகள் முன் வைப்பீர்கள்?

3. கேகேஎஸ்எஸ்ஆர் போன்ற மற்ற அதிமுக அமைச்சர்கள் போல், ஜெயலலிதா திமுகவில் தொண்டராக இணைய வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?

4. தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது செய்த தவறு ஏதாவது உண்டா?

5. அரசியல்வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் தேவையா? எப்போது? ஏன்?

6. பிஜேபி அரசில் அங்கம் வகித்தும் திமுகவால் தடுக்கமுடியாத தீர்மானங்கள் என்ன?

7. அடுத்த அரசில் அங்கம் வகிப்பதால் இவற்றை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

8. கடந்த தேசிய அரசுகளில் பங்கு கொண்டும் தீர்க்க முடியாத பிரசினைகள் எவை? அவற்றை எவ்வாறு இம்முறை சமாளிப்பீர்கள்?

9. வாரிசுகளுக்குள் சண்டை வருவதை சரி செய்ய என்ன செய்யலாம்?

10. ஹிந்தி திணிப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற கொள்கையை கடைபிடித்ததற்காக வருந்தியதுண்டா? எந்த சிந்தனைகளுக்காக?

பிகு: இவைகளை கேட்டால் தொலைபேசியும் தொலைபேசி சார்ந்த நபர்களுக்கு விளையும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு