வியாழன், ஜூன் 03, 2004

இலக்கிய அரசியலும் வெகுஜன அரசியலும் - காலச்சுவடு கண்ணன்

உலகத்தமிழ்.காம்: அறிவு ஜீவிகள் அரசியல் இயக்கங்களுடன் கொள்ள வேண்டிய உறவின் தன்மை பற்றியும், இருக்க வேண்டிய விலகல் பற்றியும் பரவலான விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக எட்வர்ட் சையத்தின் கட்டுரைகள். இவற்றை ஆராய்வது அல்ல இங்கு நோக்கம். அரசியலின் ‘அசுத்தத்’திற்கு வெளியே சமூகத்தில் தனியாகச் ‘சுத்தம்’ என்று நிலவுகிறதா என்பதைப் பார்க்கலாம்.

பத்திரிகையாளர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்த அவதூறையும் எழுதிவிட்டு ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்ற உயர்ந்த விழுமியத்தில் பதுக்கிக்கொள்ளும் வரம் படைத்தவர்கள். தாங்கள் செய்யும் செயல்பாடுகளுக்கும் ஊழலுக்கும் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.

சமூகப் பிரச்சினைகள் பற்றியும் மனித மனம் பற்றியும் தீர்க்கமான சிந்தனைகள் அறிவுஜீவிகளிடம் இருக்கலாம். இவை கரிசனம் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் பயன்படலாம். எனவே இந்த இரு சார்புகளுக்கும் இடையே உரையாடல் நடப்பது நமது சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கலாம். மாறாக, இன்று அரசியலையோ சமூகத்தையோ சீர்திருத்தும் அறச்சார்புகளோ விழுமியங்களோ நமது அறிவு ஜீவிகளிடம் இருப்பதாகக் கருதுவது ஒரு மூடநம்பிக்கை என்றே கொள்ள முடியும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு