வியாழன், ஜூலை 01, 2004

நீ வருவாய் என (பாடல் வரிகள்)

அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்திருந்த தாமரைகள்
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டதோ
காதலிலே நீர்வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியினிலே
வலம்போகும் கற்பனைகள்
நான் அவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே
---

நீ வருவாய் என
நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என
நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ....
---
அடி தேவி
உன்தன் தோளில்
ஒரு பூவானால் இன்று

இறவெங்கே உறவெங்கே
உன்னைக் காண்பேனே என்றும்

அமுத நதியினில் தினமும் என்னை நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு

தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?
---

ஒரு மேடை
ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

குழல்மேகம்
தரும் ராகம்
அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியினில் புதிய கவிதையை சொல்ல வாராயோ?
---

பாடல் கேட்க: தினம் ஒரு பாடல்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு