புதன், நவம்பர் 24, 2004

உக்ரெய்ன்

உக்ரைன் நாட்டில் தேர்தல் முடிவு தொடர்பான முட்டுக்கட்டை நீடிப்பு: நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியாவிற்கு ஆதரவான தற்போதைய பிரதமர் விக்டர் யானுகோவிச்சிற்க்கே வெற்றி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உக்ரெய்ன் நாட்டில் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவுகளை விவாதித்து வரும் அந் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெரும் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. கூடியுள்ளோரில் பலர் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யுஷென்கோவிற்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர். நடைபெற்ற தெர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக விக்டர் யுஷென்கோ கூறுகிறார். தலைநகர் கியவ்வில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அரசு தொலைக்காட்சியிலும், அரசு ஆதரவு தொலைக்காட்சிகளிலும் காட்டப்படவில்லை.

நன்றி: BBC Tamil

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு