சனி, டிசம்பர் 04, 2004

சுகிர்தாராணி

நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட
புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என் உடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை... என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு